ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 5. பஞ்சாக்கரம் - தூலம்

பதிகங்கள்

Photo

வெறிக்க வினைத்துயர் வந்திடும் போது
செறிக்கின்ற நந்தி திருவெழுத் தோதும்
குறிப்பது உன்னில் குரைகழல் கூட்டும்
குறிப்பறி வான்தவம் கோன்உரு வாமே.

English Meaning:
Blessings of the Five Lettered Mantra — of Siva`s Feet and Form

When Karma`s miseries harass you,
Chant the Five-Lettered Mantra
Of Nandi pervasive;
If you thus seek Him,
He, the Grace of His Holy Feet confers;
Your devotion shall lead you to Siva Form.
Tamil Meaning:
செயலற்று நிற்கும்படி வினையின் பயனாகிய துன்பங்கள் வந்து விளையும்பொழுது, அவற்றால் சோர்வுறாதபடி உறுதியைத் தருகின்ற திருவைந்தெழுத்தை ஓதும் கருத்தைக் கொண்டால் அக்கருத்து அதனை உடையவனைச் சிவனது திருவடியில் சேர்க்கும். மேலும் அக்கருத்துடையவன் செய்யும் செயல்கள் சிவனது உருவேயாகும்.
Special Remark:
வெறித்தல் - வெறிச்சோடிப் போதல், செறிதல், அடங்குதல் ஆதலின், செறித்தல் அடக்குதல். அஃதாவது, துயரத்தை வெளிக்காட்டு இருத்தல். குறிப்பு - கருத்து.