ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உதிக்கின்ற இந்திரன் அங்கி யமனும்
    துதிக்கும் நிருதி வருணன் நல் வாயு
    மதிக்கும் குபேரன் வடதிசை ஈசன்
    நிதித்தெண் டிசையும் நிறைந்திநின் றாரே.
  • 10. ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
    நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
    வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
    சென்றும் இருந்தும் திருவுடை யோரே.
  • 2. ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
    மருங்கியல் மாயா புரியத னுள்ளே
    சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
    ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.
  • 3. மொட்டலர் தாமரை மூன்றுள மூன்றினும்
    விட்டலர் கின்றனன் சோதி விரியிதழ்
    எட்டல ருள்ளேர் பிரண்டல ருள்ளுறில்
    பட்டலர் கின்றதோர் பண்டம் கனாவே
  • 4. ஆறே அருவி அகம் குளம் ஒன்றுண்டு
    நூறே சிவகதி நுண்ணிது வண்ணமும்
    கூறே குவிமுலைக் கொம்பனை யாளொடும்
    வேறே யிருக்கும் விழுப்பொருள் தானே.
  • 5. திகையெட்டும் தேர்எட்டும் தேவதை யெட்டும்
    அகையெட்டு மாய்நின்ற ஆதிப் பிரானை
    வகையெட்டும் நான்கும்மற் றாங்கே நிறைந்து
    முகையெட்டி னுள்நின் றுதிக்கின்ற வாறே.
  • 6. ஏழும் சகலம் இயம்பும் கடந்தெட்டில்
    வாழும் பரம்ஒன்(று) அதுகடந் தொன்பதில்
    ஊழி பராபரம் ஊங்கியை பத்தினில்
    தாழ்வு அது ஆன தனித்தன்மை தானே.
  • 7. பல்லூழி பண்பிற் பகலோன் இறையவன்
    நல்லூழி ஐந்தினுள் ளேநின்ற ஊழிகள்
    செல்லூழி அண்டத்துச் சென்றவண் ஊழியுள்
    அவ்வூழி உச்சியுள் ஒன்றின் பகவனே.
  • 8. புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
    திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
    எரியும் மழையும் இயங்கும் வளியும்
    பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.
  • 9. ஊறும் அருவி உயர்வரை உச்சிமேல்
    ஆறின்றிப் பாயும் அருங்குளம் ஒன்றுண்டு
    சேறின்றிப் பூத்த செழுங்கொடித் தாமரைப்
    பூவன்றிச் சூடான் புரிசடை யோனே.