ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை

பதிகங்கள்

Photo

ஒருங்கிய பூவும்ஓர் எட்டித ழாகும்
மருங்கியல் மாயா புரியத னுள்ளே
சுருங்கிய தண்டின் சுழுனையி னூடே
ஒருங்கிய சோதியை ஓர்ந்தெழும் உய்ந்தே.

English Meaning:
The Eight Petalled Lotus in Sahasrara

In the Maya-Land of body
Is the Flower of petals eight (pointing to directions eight)
Through the lean stalk of Sushumna,
Contemplate on its radiance,
And ascend upward;
Redeemed are you then.
Tamil Meaning:
உயிர்களோடு ஒன்றி இயங்குகின்ற மாயா நகரத்தில் ஒன்றை ஒன்று ஒத்துள்ள தாமரைமலர்கள் எட்டிதழ்களையுடையன வாகும். அவை உள்ளே நுணுகிய புழையை உடைய தண்டின்மேல் உள்ளன. அவற்றுள் ஒரு தண்டு `சுழுமுனை` எனப்படுகின்றது. அதனோடு உள்ள புழையால் மலர்கின்ற தாமரையில் விளங்குகின்ற ஒளியையே யோகிகள் காண்கின்றனர் ஆதலின் மற்றொரு தாமரையிலும் அந்த ஒளியையே பாவித்து உய்தி பெறுங்கள்.
Special Remark:
இம்மந்திரம் இரட்டுற மொழிந்தது. பூ - 1 மலர்; இதய கமலம் 2 பூமி. மாயாபுரி - 1 அண்டம். 2 பிண்டம், உடம்பு இதய கமலத்தை உடைய தண்டு சுழுமுனை நாடி. பூமியைத் தாங்குகின்ற தண்டு அனந்தன் - (ஆதிசேடன்) இதய கமலத்தில் விளங்குகின்ற ஒளி சிவன். அவனையே அண்டத்திலும் (பூமியிலும்) நடுநாயகனாக வைத்து, ஏனையோரைச் சுற்றுக் கடவுளராகக் கொண்டு வழிபட்டு உய்க என்பதமாம். இவ்வாறு செய்யும் வழிபாடு சிவாலயங்கள் அனைத்திலும் என்றும் நிகழ்ந்து வருதல் வெளிப்படை எனவே, `முன் மந்திரத்துக் கூறப்பட்ட திசைக் காவலர்களைச் சிவனது ஆணையை நடத்தும் அதிகாரிகளாகக் கொண்டே வழிபடுதல் வேண்டும்` என்பது போந்தது. `இதுவே சிவ நெறி` என்க.
இரண்டாம் அடியை முதலில் வைத்து உரைக்க எழுதல் - மேம்படுதல்.
இதனால், `வைதிக கருமங்களைச் செய்யினும் சைவ முறையிலே செய்தலே ஆன்றோர் ஆசாரம்` என்பது கூறப்பட்டது.