
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை
பதிகங்கள்

புரியும் உலகினைப் பூண்டஎட் டானை
திரியும் களிற்றொடு தேவர் குழாமும்
எரியும் மழையும் இயங்கும் வளியும்
பரியும்ஆ காசத்தில் பற்றது தானே.
English Meaning:
Seek Him Wherever He isHe is in this world
Yet if He is beyond reach,
Seek Him in Heaven,
Where the elephants roam
And the Celestials wander,
Where fire, rain and wind abide;
In that Space seek Him.
Tamil Meaning:
முதற் கடவுளால் ஆக்கி அளிக்கப்படும் உலகத்தின் திசைகள் எட்டாகப் பாகுபட்டு உள்ளன. `அத்திசைகளில் எட்டு யானைகள் நின்று உலகத்தைத் தாங்குகின்றன` என்பதும், `அந்த யானைகளைத்தங்கள் ஊர்திகளாகக் கொண்டு உலாவும் தலைவர்கள் உளர்` என்பதும் இருக்கட்டும். நெருப்பும், நீரும், ஓயாது இயங்கும் காற்றும் ஆகாசமாகிய வெளியைப் பற்றாகக் கொண்டுதான் இயங்குகின்றன. அதுபோல, அனைத்திற்கும் பற்றுக்கோடாய் உள்ளவன் அனைத்து ஊழிகளையும் கடந்து நிற்கின்ற அவனே.Special Remark:
`அதிசைக் காவலர்களே உலகிற்குப் பற்றுக் கோடல்லர்` என்பது கருத்து. அக்கருத்து உவமை காட்டித் தெளிவிக்கப்பட்டது. பூண்ட - பூண்டன; சுமக்கின்றன. எண்மரையும் சேர்த்து, `குழாம்` என்றார். அவர்களை உலகிற்குப் போதியவராகக் கருதுபவரை உட்கொண்டு, ஏனைத் தேவரைச் சேர்த்திலர். `குழாமும் திரியும்` என்க. உம்மை, இறந்தது தழுவிற்று. பரிதல் - இயங்குதல். ஆகாசத்தில் பரியும் எனவும், `அதுவே பற்று` எனவும் மாற்றியுரைக்க. தான், அசை. `அதுபோல அனைத்திற்கும் பற்று அவனே` என்பது குறிப்பெச்சம்.இதனால், முன் மந்திரத்திற் கூறப்பட்ட பொருள் வலியுறுத்தி விளக்கப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage