ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 31. அட்ட தள கமல முக்குண அவத்தை

பதிகங்கள்

Photo

ஒன்றும் இரண்டும் ஒருங்கிய காலத்து
நின்றும் இருந்தும் நிலம்பல பேசினும்
வொன்றும் இருந்து விகிர்தனை நாடுவர்
சென்றும் இருந்தும் திருவுடை யோரே.

English Meaning:
The Eight-Petalled Bloom is Dear to Siva

There on the lofty top of Mount (Meru) within
Is a pond no stream feeds;
And there is a lotus bloom
From no soil mud springs;
Without that bloom,
He decks not Himself
He of matted locks.
Tamil Meaning:
மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போகும் காலத்தில், அவனது திருவருளைப்பெற்று நிற்கும் பெரியோர்கள் உலகத்தார் ஆங்காங்கே நின்று கொண்டும், இருந்து கொண்டும், தங்கள் வாய்க்கு வந்த எவற்றைப் பேசினாலும் அவற்றைப்பொருட்படுத்தாது, ஐம்புலன்களை வெல்லுதலும் செய்து, நடந்தாலும், இருந்தாலும் சிவனை உணர்ந்தேயிருப்பர்.
Special Remark:
`அவருடைய உணர்வே உண்மை அட்டதள கமல வழிபாடாகும்` என்பது குறிப்பெச்சம். இறைவனுடைய திருவுள்ளம், `உயிர் தன்னை உணர்தற்கு எந்தத் தடையும் இருத்தல் கூடாது` என்பது. ஆணவமலம் மறைத்தலைச் செய்யாது வாளா இருத்தலும், மாயை கன்மங்கள் உயிர்கள் திருவருள் நெறியில் ஒழுகுதற்குத் துணை செய்தலுமே மும்மலங்களும் இறைவனது திருவுள்ளத்தோடு ஒத்துப்போதலாம். `அந்நிலை மலம் பரிபாகமான காலத்தில் உண்டாகும்` என்பது கருத்து. ``மால் இவன் என்ன மன நினைவில் - ஒத்தன சொல்லிட ஊரூர் திரிந்து எவரும் - தத்தம் மனத்தன பேச``3 என்னும் ``நிலையே, நிலம், நின்றும், இருந்தும் பல பேசினும் விகிர்தனை நாடுவர்`` என்றார். ``வென்றும்`` என்னும் உம்மை சிறப்பும்மை.
இதனால், சைவ வழிபாடு மலபரிபாகத்தில் உலகியலின் நீங்கினாரிடத்தில திரிபின்றி நிற்கும்` என்பது கூறப்பட்டது.