ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அங்கிசெய் தீசன் அகலிடஞ் சுட்டதவ்
    வங்கிசெய் தீசன் அலைகடற் சுட்டதவ்
    வங்கிசெய் தீசன் அசுரரைச் சுட்டதவ்
    வங்கிஅவ் வீசற்குக் கைஅம்பு தானே.
  • 10. தீயவைத் தார்மின்கள் சேரும் வினைதனை
    மாயவைத் தான்வைத்த வன்பதி ஒன்றுண்டு
    காயம்வைத் தான்கலந் தெங்கும் நினைப்பதோர்
    ஆயம்வைத் தாய்உணர் வாரவைத் தானே. 
  • 2. இலயங்கள் மூன்றினுள் ஒன்றுகற் பாந்தம்
    நிலையன் றழிந்தமை நின்றுணர்ந்தேனால்
    உலைதந்த மெல்லரி போலும் உலகம்
    மலைதந்த மாநிலந் தான்வெந் ததுவே. 
  • 3. பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
    உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
    குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
    விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே. 
  • 4. கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
    அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
    ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
    குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே. 
  • 5. நித்தசங் காரம் உறக்கத்து நீள்மூடம்
    வைத்தசங் காரமுஞ் சாக்கிரா தீதமாம்
    சுத்தசங் காரந் தொழிலற்ற கேவலம்
    உய்த்தசங் காரம் பரன்அருள் உண்மையே.
  • 6. நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
    வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
    சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
    உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே. 
  • 7. நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
    ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
    சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
    உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.
  • 8. நித்தசங் காரமும் நீடிளைப் பாற்றலின்
    வைத்தசங் காரமும் மன்னும் அனாதியில்
    சுத்தசங் காரமுந் தோயாப் பரன்அருள்
    உய்த்தசங் காரமுன் நாலாம் உதிக்கிலே.
  • 9. பாழே முதலா எழும்பயிர் அப்பயிர்
    பாழாய் அடங்கினும் பண்டைப்பாழ் பாழாகா
    வாழாச்சங் காரத்தின் மாலயன் செய்தியாம்
    பாழாம் பயிராய் அடங்கும்அப் பாழிலே.