ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 

பதிகங்கள்

Photo

கொண்டல் வரைநின் றிழிந்த குலக்கொடி
அண்டத்துள் ஊறி யிருந்தெண் டிரையாகி
ஒன்றின் பதஞ்செய்ய ஓம்என்ற அப்புறக்
குண்டத்தின் மேல்அங்கி கோலிக்கொண் டானே. 

English Meaning:
The grace of Bindu descended from the cloud-clad mountains,
Pervaded the universe, and all the quarters,
Entered in Pranava and abides as Kundalini in Muladhara.
Tamil Meaning:
மேகங்கள் மலைக்கண் தங்குதலால் நிலத்தில் இறங்கிய நீராகிய குலமகள் உலகத்தில் தங்கியும், கடலாகியும் நின்று இனிய உணவுகளை உண்டாக்கிக் கொண்டிருக்கும் பொழுதே இறைவன் `நாதம்` என்னும் அவ்விடத்ததாகிய குண்டத்தில் விளங்கும் மேலான நெருப்பை வளர்த்துவிட்டான். அஃதாவது, `அழித்தல் தொழிலை மேற்கொண்டான்` என்பதாம்.
Special Remark:
`வானின்று உலகம் வழங்கி` வருதல்பற்றி காத்தற் சத்தியை, `மழை` என்றே கூறினார். நீரைப் பெண்ணாகக் கூறுதல் மரபாதல் அறிக. `நிற்ப` என்பது, ``நின்று`` எனத் திரிந்தது. மேகம், மலைமேல் தங்கியே மழை பொழிதல் வெளிப்படை. ``அண்டம்`` என்பது, `உலகம்` என்னும் அளவாய் நின்றது. திரை, ஆகுபெயர். பதம் - உணவு. செய்தல் - உண்டாக்குதல். `செய்ய` என்பது நிகழ்காலத்தின்கண் வந்தது. புறம் - இடம். `உலக நெருப்பன்று; தனது அழித்தற் சத்தியே` என்றற்கு, ``ஓம் என்ற ..... அங்கி`` என்றார்.
இதனால், `நிலைத் தொழில் அதன் கால எல்லையில் முற்றுப் பெறும்` என்பது கூறி, ஒடுக்கம் நிகழ்தல் வலியுறுத்தப்பட்டது.