ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 

பதிகங்கள்

Photo

நித்தசங் காரம் இரண்டுடல் நீவுதல்
வைத்தசங் காரமும் மாயாசங் காரமாம்
சுத்தசங் காரம் மனாதீதந் தோய்வுறல்
உய்த்தசங் காரஞ் சிவன்அருள் உண்மையே. 

English Meaning:
In Daily mergence, are bodies gross and subtle transcended;
In the next mergence, is the Mayaic body annihilated;
In Pure mergence, Mind and cognates merge in the Infinite
In Redemption Death, Siva`s Grace descends true.
Tamil Meaning:
இன்னும் வேறொருவகையாற் கூறுமிடத்து, `நித்திய சங்காரம், தூலம், சூக்குமம்` என்னும் இரண்டு உடம்புகள் உள்ளபொழுதும் அவற்றோடு ஒட்டாது நீங்கி நிற்றல்` எனவும், `ஆயுட் சங்காரம் தூல உடம்பு அழிந்தொழிதல்` எனவும், `சருவ சங்காரம் சூக்கும உடல் நீங்குதல்` எனவும் கூறுதற்குரியன. எனவே, திருவருட் சங்காரமாகிய அருளலே சிவப்பேறாகும்.
Special Remark:
இரண்டுடலும் உள்ளபொழுதே ஒட்டாதிருத்தல் உறக்கத்திலாம். `சூக்கும சரீரம் முத்தி பெறுங்காறும் நீங்காது நிற்கும்` எனக் கூறுதல், ஆயுட் சங்காரத்தை நோக்கியாம். ``மாயா சங்காரம்`` என்றதில், ``மாயை`` என்றது பிரகிருதியை. சகல வருக்கத்தினருக்குப் பிரகிருதியளவு சங்கரித்தலே சருவ சங்காரமாதல் பற்றி ``சுத்த சங்காரம் மனாதீதம் தோய்வுறல்`` என்றார். ``மனம்`` என்றது பிற அந்தக் கரணங்கட்கும் உபலக்கணம். நீவுதல் - துடைத்தல்.