
ஓம் நமசிவாய
இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம்
பதிகங்கள்

பதஞ்செய்யும் பாரும் பனிவரை எட்டும்
உதஞ்செய்யும் ஏழ்கடல் ஓதம் முதலாங்
குதஞ்செய்யும் அங்கி கொளுவி ஆகாச
விதஞ்செய்யும் நெஞ்சின் வியப்பில்லை தானே.
English Meaning:
The earth on which we treadThe snow-clad mountains eight.
The seven seas whose ebbing tides roar,
Over all these and else
The Fire that resides in Muladhara spreads;
And the spreading conflagration turned
Earth and sky seem alike;
Shapes are not to be wondered at.
Tamil Meaning:
பல உயிர்கட்கு இடம் அளிக்கின்ற அகன்ற நிலமும், குளிர்ந்த எட்டு உயர்மலைகளும், நீரை மிகத் தருகின்ற எழுகடல் நீர்ப்பரப்பும் முதலாக அனைத்துப் பொருள்களையும் சிவபெருமான் தனது நினைவு மாத்திரத்தால் காய்தலைச் செய்யும் நெருப்பை வைத்து அழித்து உருவில்லனவாகச் செய்துவிடுவான். இதில் வியப்பில்லை.Special Remark:
`உதகம், குரோதம்` என்பன இடைக் குறைந்து நின்றன. ஐம்பூதங்களுள் ஆகாசம் அருவப் பொருளாதலின், உருவழிந்த நிலையை அதன் வகையாக ஓதினார். விதம் - வகை. `விதமாக` என ஆக்கம் வருவிக்க. `நெஞ்சின் செய்யும்` என மாறுக. கிடந்தவாறே வைத்து, `நெஞ்சின் என, வேண்டா கூறி, வியப்பின்மையை வலியுறுத்தினார்` என்றலுமாம்.இதனால், நிலமேயன்றிப் பிறவும் அழிதல் கூறுமாற்றால், மகாசங்காரம் உண்மை கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage