ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 11. சங்காரம் 

பதிகங்கள்

Photo

நித்தசங் காரங் கருவிடர் நீக்கினால்
ஒத்தசங் காரம் உடலுயிர் நீவுதல்
சுத்தசங் காரம் அதீதத்துள் தோய்வுறல்
உய்த்தசங் காரம் பரனருள் உண்மையே.

English Meaning:
In daily mergence the senses are silent,
In the next mergence the soul leaves the body,
In pure mergence the soul remains completely free,
In the final mergence there is union with Siva.
Tamil Meaning:
இனி, நித்திய சங்காரம் தூல உடம்பொடு நிற்கும் பொழுதே அதனொடு கூடாதிருக்கச் செய்வதென்றால், ஆயுட் சங்காரம் அதனை அடியோடு விடச் செய்வதாகும். சருவ சங்காரம் சூக்கும உடம்பையும் விடப்பண்ணுவது. ஆகவே, திருவருட் சங்கார மாகிய அருளலே சிவனை அடைதல் என்பது கடைப்பிடித்து உணரத்தக்கது.
Special Remark:
``கரு`` என்றது, கருவாய்த் தோன்றி வளரும் தூல உடலை அதன் இடர் நீங்குதல் - அதனால் வரும் அனுபவம் இன்மை. ``நீக்கினால்`` என்னும் எச்சம் தெளிவின் கண் வந்து, பின் வருவதும் அத்தன்மையது என்பதனைத் தெரிதற்கு ஏதுவாய் நின்றது. ``நீரின்றமையா துலகெனின்`` (குறள் - 20) என்றாற்போல.