ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. இறப்பும் பிறப்பும் இருமையும் நீங்கித்
    துறக்கும் தவங்கண்ட சோதிப் பிரானை
    மறப்பில ராய்நித்தம் வாய்மொழி வார்கட்
    கறப்பயன் காட்டும் அமரர் பிரானே.
  • 10. தூம்பு திறந்தன்ன ஒம்பது வாய்தலும்
    ஆம்பற் குழலி னகஞ்சுளிப் பட்டது
    வேம்பேறி நோக்கினன் மீகாமன் கூரையிற்
    கூம்பேறிக் கோயிலிற் பூக்கின்ற வாறே.
  • 2. பிறந்தும் இறந்தும்பல் பேதைமை யாலே
    மறந்த மலஇருள் நீங்க மறைந்து
    சிறந்த சிவன் அருள் சேர்பரு வத்துத்
    துறந்த உயிர்க்குச் சுடரொளி யாமே.
  • 3. அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
    உறைவது காட்டகம் உண்பது பிச்சை
    துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
    பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.
  • 4. நெறியைப் படைத்தான் நெருஞ்சில் படைத்தான்
    நெறியில் வழுவின் நெருஞ்சில்முட் பாயும்
    நெறியில் வழுவா தியங்கவல் லார்க்கு
    நெறியில் நெருஞ்சில்முட் பாயகி லாவே.
  • 5. கேடும் கடமையும் கேட்டுவந் தைவரும்
    நாடி வளைந்தது நான்கட வேனலேன்
    ஆடல் விடையுடை யண்ணல் திருவடி
    கூடும் தவம்செய்த கொள்கையன் றானே.
  • 6. உழவன் உழவுழ வானம் வழங்க
    உழவன் உழவினிற் பூத்த குவளை
    உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
    உழவன் அதனை உழவொழிந் தானே.
  • 7. மேற்றுறந் தண்ணல் விளங்கொளி கூற்றுவன்
    நாட்டுறந் தார்க்கவன் நண்பன் அவாவிலி
    கார்த்துறந் தார்க்கவன் கண்ணுத லாய்நிற்கும்
    பார்த்துறந் தார்க்கே பதஞ்செய லாமே.
  • 8. நாகமும் ஒன்று படம் ஐந்து நாலது
    போகம் முட் புற்றில் பொருந்தி நிறைந்தது
    ஆகம் இரண்டும் படம்விரித் தாட்டொழிந்
    தேகப் படஞ்செய் துடம்பிட மாமே.
  • 9. அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
    இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
    சிவன்றான் பலபல சீவனு மாகும்
    நயன்றான் வரும்வழி நாமறி யோமே.