ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

அறவன் பிறப்பிலி யாரு மிலாதான்
உறைவது காட்டகம் உண்பது பிச்சை
துறவனுங் கண்டீர் துறந்தவர் தம்மைப்
பிறவி யறுத்திடும் பித்தன்கண் டீரே.

English Meaning:
The Renunciate Lord Sunders Birth Bonds

He is Dharma, He is birthless, kinless;
In the wilds he abides, by alms he lives;
Know you, He has renounced all;
And to all those who renounce,
He sunders their bonds of birth
You insensate ones! Know thus.
Tamil Meaning:
``அறவாழி யந்தணன்``1 என்றற் றொடக்கத் தனவாக நூல்களில், `பல வகை அறங்களையும் தனக்கு வடிவாக உடையன்` எனக் கூறப்படுகின்ற கடவுள், பிறப்பு இல்லாதவனும், அதனால், பற்றுச் செய்தற்குக் கிளைஞர் ஒருவரும் இல்லாதவனும், வாழும் இடம் காடாகவும், உண்ணும் உண் பிச்சையாகவும் உடைய வனுமாதலால் சிறந்த துறவியாய் உள்ள சிவனேயாவன். அதனால், அவன் துறவு பூண்டவர்களையே பிறவியைக் கடப்பித்து உய்விக் கின்ற பேரருளாளனுமாய் உள்ளான். இவற்றை அறிமின்கள்.
Special Remark:
`அறவடிவானவன்` என்னும் பொருட்டாய்க் கடவுட்கு யாவரும் உடன்பட்டுக்கூறும் பொதுக் காரணப்பெயராய் ``அறவன்`` என்பது எழுவாயாய் நின்று சிவனைக் குறித்த ``துறவன்`` என்னும் சிறப்புக் காரணப் பெயராய பயனிலையைக் கொண்டது. பிறப்பிலி முதலிய நான்கும் சிவன் சிவன் சிறந்த துறவியாமாற்றை விளக்கி நின்றன. `சிவன் சிறந்ததுறவி யாதலின், சிறந்த துறவியரிடத்தே அருள் மிக உடையனாய் அவர்களை உய்விக்கின்றான்` என்றவாறு. இல்லறத் தவரும் அன்பு, பொறை, ஒப்புரவு, ஈகை முதலியவற்றை உடையரா யினும் பற்றறாமையின், எல்லா உயிர்கள்மேலும் அருளுடையராய்த் `தன்னுயிர் நீப்பினும் தான் பிறிது இன்னுயுர் நீக்காது`2 ஒழுகுதல் முதலியவற்றை உடையராக மாட்டாமையின், `அறவோர்` எனப் பெயர் பெறமாட்டார்கள். துறவியரே அந்நிலைக் கண் நிற்கவல்லராய் ``அற வோர்`` எனப் பெயர் பெற்று நிற்றலின், அவரே அறவாழியந்தணனாகிய இறைவனது அருட்குப் பெரிதும் உரியராகின்றனர் என்பது தோன்ற, இறைவனை, ``அறவன்`` எனப் பொதுவகையானும், ``துறவன்`` எனச் சிறப்பு வகையானும் கூறினார். ``உறைவது காட்டகம், உண்பது பிச்ை\\\\u2970?`` என்றவை, `உடுப்பது தோல், முடிப்பது சடை, பூசுவது சாம்பல்` முதலிய வற்றிற்குத் தோற்றுவாயாய் நின்றன. நிற்கவே, இவை பற்றிச் சிவனை இகழ்வோர் துறவாது பெருமையை அறியும் அறிவிலார் என்பது அறியப்படும். அறிவுடையார் இன்னோரன்னவற்றைப் புகழ்ந்து போற்றுதல் அறியத் தக்கது. ``துறவனும்`` என்னும் உம்மையை, ``பித்தன்`` என்பதனோடு கூட்டுக. ``பிறவி யறுத்திடும்`` என்னும் தொகைச்சொல் `உய்விக்கும்` என்னும் ஒருசொற் பொருட்டாய் , ``துறந் தவர்தம்மை`` என்னும் இரண்டாவதற்கு முடிபாயிற்று. பித்துப் போறலின் பேரருள். ``பித்து`` எனப்பட்டது. உய்வித்தற்குக் காரணத்தைக் குறித்து நிற்றலின், இது துறந்தார் மேலதாதல் அறியப்படும்.
இதனால், துறந்தோரே சிவனருட்கு உரியராதல் கூறப்பட்டது. இத்துறவு, ``தம்மை உணர்ந்து தமையுடைய தன்னுணரும்``1 உணர்வால் வரும் அகத்துறவாதல் அன்றி, வாளா, மனை துறந்து. 2
``நாடுகளிற் புக்குழன்றும் காடுகளிற் சரித்தும்
நாகமுழை புக்கிருந்தும் தாகமுதல் தவிர்ந்தும் 3
வருந்துதலாகிய புறத்துறவாகாமை அறிக.