ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரானும்
இவன்றான் எனநின் றெளியனும் அல்லன்
சிவன்றான் பலபல சீவனு மாகும்
நயன்றான் வரும்வழி நாமறி யோமே.

English Meaning:
None Knows How He Comes

The Primal Lord is the first of Renunciates;
In that thought is little comfort
Not that easy may He come by;
Many, many lives may it take
For Siva`s Feet to reach;
Who knows how and when
The Loved One comes!
Tamil Meaning:
துறந்தவரது குடிக்குத் தானே முதல் என நிற்கின்ற சிவபெருமான், `இன்ன வகையினன்` என ஒருவராலும் இனங்கண்டு கூறற்கு எளியனாய் நிற்பானல்லன். அதனால், அவன் அளவற்ற உயிர்களில் நிறைந்து அவையேயாயும் நிற்பன்; அவனது அருள் எவ்வாற்றால்வரும் என்பதையும் நாம் அறியமாட்டோம்.
Special Remark:
குடிக்கு முதலாதலாவது, ``குடிமுழுதாண்டு, வாழ்வற வாழ்வித்து``1 அதனை `சிவக்குடி` என யாவரும் கூற வைத்தல் `சிவன் யாதொரு கூற்றினும் படாதவன்` என்பதை, ``எந்தை யாரவர் எவ்வகை யார்கொலோ``3 என்பது முதலியவற்றான் அறிக. ``சிவன்தான்`` என்பதில் ``தான்`` என்பது தேற்றப்பொருட்டாய், அனுவதித்தலை உணர்த்திற்று. `உயிர்கள் அளவற்றன ஆதலின், அவற்றிற்கு அவன் அருளும் முறைமைகளும் அளவில்லனவாய். நம்மால் அறியவாரா` என்பார் அவன் அளவற்ற உயிர்களில் அவை யேயாய்க் கலந்துநிற்றலை எடுத்தோதினார். இவ்விடத்து, `சிவன் தாள்` எனச் சத்திமேல் வைத்து ஓதுதற்கு இயைபின்மையின், அது பாட மாகாமை அறிக. நயம், `நயன்` எனப் போலியாற்று. `அருள்` என்பது இதன் பொருள். `சிவனது அருள் உயிர்கட்கு வருமாறு இவையே` என வரையறுக்க ஒண்ணாமையை,
``ஆட்பாலவர்க் கருளும் வண்ணமும் ஆதி மாண்பும்
கேட்பான் புகில்அள வில்லை கிளக்க வேண்டா`` 1
எனத் திருஞானசம்பந்தரும் அருளிச்செய்தார். இங்ஙனம் கூறவே, `இல்லம் துறந்து, வேடம்பூண்டு ஓரிடத்தில் நில்லாது செல்வோரே துறந்தாராவர்` எனக்கொண்டு, `அவ்வாறில்லாத சிலரும் சிவனது அருள்பெற்றமை கேட்கப்படுதல் என்னை` என ஐயுற்றவர்க்கு, `புறத் துறவு இல்லாது அகத்துறவே உணராய்ப் பல்வேறு நிலையில் நிற்பார்க்கும் சிவன் பல்வேறு வகையாய் அருள்புரிதல் உண்டு; ஆயினும் அதுபற்றுதல் இன்றியாகாது` என ஐயம் அறுத்தவாறாயிற்று. `பற்றறாதவழிச் சிவனருள் கூடாது` என்றற்கே முதற்கண், ``அகன்றார் வழிமுதல் ஆதிப் பிரான்`` என அருளிச்செய்தார்.
``... ... ... ... அகன்ஞாலத் தகத்துள் தோன்றி
வருந்துணையும் சுற்றமும் பற்று விட்டு
வான்புலன்கள் அகத்தடக்கி மடவா ரோடும்
பொருந்தணைமேல் வரும்பயனைப் போக மாற்றி``2
என்றது, நிறைவான துறவு நிலையை உணர்த்தியருளியவாறு. இதனுள் உயிரெதுகை வந்தது.
இதனால், திருவருளுக்குரிய துறவு நிலை தோற்றத்தால் பல வகையினதாதல் கூறப்பட்டது.