ஓம் நமசிவாய

ஆறாம் தந்திரம் - 4.துறவு

பதிகங்கள்

Photo

உழவன் உழவுழ வானம் வழங்க
உழவன் உழவினிற் பூத்த குவளை
உழவன் உழத்தியர் கண்ணொக்கு மென்றிட்டு
உழவன் அதனை உழவொழிந் தானே.

English Meaning:
When Grace Blossoms, Tapas Ceases

The ploughman ploughed; the heavens poured;
And by the ploughman`s ploughing, in time it flowered;
The ploughman then to the ploughwoman left,
As unto her eyes the flowers are,
To watch, and guard and tender;
The ploughman thus for ever ceased
All efforts at ploughing further.
Tamil Meaning:
உழவன் உழவைச் செயதற் பொருட்டு மழை பெய்ய, அதன்பின் அவன் செய்த உழவினால் தோன்றி வளர்ந்து பூத்த குவளை மலரை அது களையாதலின் களைய வேண்டுவதாய் இருக்க, உழவன் தன் மனைவி முதலிய பெண்டிரது கண் போல உள்ளது என்று அதன்மேல் அன்புகொண்டு களையாமலே விடுகின்றான்.
Special Remark:
`உலகப் பற்று அத்துணை வலிதாகின்றது` என்பது கருத்து. இங்ஙனங் கூறுதல் இலக்கிய வழக்காதலால், `உலகப் பற்றின் வலிமையை இலக்கியங்களும் இன்னோரன்னவாற்றால் விளக்கி, அதனை விடுமாறு உணர்த்துகின்றன. என்பதும் குறிப்பாயின. ``உழவு உழ`` என்பது `உழுதலைச் செய்ய` என்றவாறு. `உழவன் உழவு` என்பது காரகப்பொருட்டாய ஆறாவதன் தொகை. ``உழவினில்`` என ஐந்தனுருபாகிய இன் இல்லெனத் திரிந்தமை பிற்கால வழக்கு. ``உழவொழிந்தான்`` என்பதில், உழவு - களைதல்.
இதனால், `கற்றோராயின் உலகப் பற்றினை விடுதல் வேண்டும்` என்பது கூறப்பட்டது. இம்மந்திரத்தினையும் பிறிது மொழிதலாகக் கொண்டு இடர்ப்பட்டுரைப்பர்.