ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 6. ஞான லிங்கம்

பதிகங்கள்

Photo

வேண்டிநின் றேதொழு தேன்வினை போயற
ஆண்டொடு திங்களும் நாளும் அளக்கின்ற
காண்டகை யானொடும் கண்ணி யுணரினும்
ஊண்டகை மாறினும் ஒன்றது ஆமே.

English Meaning:
Sadasiva Dispels Karmas

Him I prayed,
My Karma to dispel and destroy;
He measures out Time`s Eternity
As year, month and day;
Worthy is He of your visioning;
And with His Virgin Sakti seek Him;
Even when your folded hands unfold
The One is He to you.
Tamil Meaning:
யாண்டும், திங்களும், நாளும் என்று இன்ன வகையாகக் காலத்தை வரையறை செய்கின்ற, ஒவ்வொரு வரும் காலை, நண்பகல், மாலை என்னும் காலங்களில் தவறாது கண்டு வணங்கத் தக்க பகலவனிடத்துக் கருதியுணரினும், உணவு முதலிய உலகியல் ஒழுக்கத்தின் நீங்கி யோகத்தின் நின்று உணரினும் அவ்விடங்களில் உணரப்படும் பொருள் ஒப்பற்றதாகிய அந்தத் தனிமுதற் பொருளே யாகும். அதனால் நான் எனது வினைக்கட்டு நீங்கி அழியுமாறு எவ் விடத்தும் அந்தத் தனிமுதற் பொருளையே விரும்பித் தொழுகின்றேன்.
Special Remark:
`கன்னி யுணரினும்` - என்பது பாடமன்று. முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. கண்ணல் - கருதல். பாவித்தல். ``மாறினும்`` என்றது, `மாறி யோக ஒழுக்கத்தில் நிற்பினும்` என்றவாறு. ``காண் தகையானொடும்`` - என்னும் மூன்றன் உருபை ஏழன் உருபாகத் திரிக்க. ஒன்று - ஒப்பற்றது. முதற் பொருளை `அது` என்றல் உபநிடத வழக்கு.
`யார் எவ்விடத்து எவ்வாறு வணங்கினும் அவ்வணக்கம் தனி முதலாகிய பரசிவத்தையே சாரும் - என உணரும் உணர்வே ஞான லிங்கமாய்ப் பயன்தரும்` என்பது இதனால் கூறப்பட்டது.