ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கண்டுகண் டுள்ளே கருத்துற வாங்கிடிற்
    கொண்டுகொண் டுள்ளே குணம்பல காணலாம்
    பண்டுகந் தெங்கும் பழமறை தேடியை
    இன்றுகண் டிங்கே இருக்கலு மாமே.
  • 10. குறிப்பினின் உள்ளே குவலயந் தோன்றும்
    வெறுப்பிருள் நீங்கி விகிர்தனை நாடுஞ்
    சிறப்புறு சிந்தையைச் சிக்கென் றுணரில்
    அறிப்புறு காட்சி அமரனு மாமே. 
  • 2. நாவிக்குக் கீழே பன்னிரண் டங்குலந்
    தாவிக்கும் மந்திரந் தன்னை அறிகிலர்
    தாவிக்கும் மந்திரந் தன்னை அறிந்தபின்
    கூவிக்கொண் டீசன் குடியிருந் தானே. 
  • 3. மூலத் திருவிரல் மேலுக்கு முன்நின்ற
    பாலித்த யோனிக் கிருவிரற் கீழ்நின்ற
    கோலித்த குண்டலி யுள்ளெழுஞ் செஞ்சுடர்
    ஞாலத்து நாபிக்கு நால்விரற் கீழதே. 
  • 4. நாசிக் கதோமுகம் பன்னிரண் டங்குலம்
    நீசித்தம் வைத்து நினையவும் வல்லையேல்
    மாசித்தி மாயோகம் வந்து தலைப்பெய்யும்
    தேகத்துக் கென்றுஞ் சிதைவில்லை யாமே.
  • 5. சோதி இரேகைச் சுடரொளி தோன்றிடிற்
    கோதில் பரானந்தம் என்றே குறிக்கொண்மின்
    நேர்திகழ் கண்டத்தே நிலவொளி எய்தினால்
    ஓதுவ தும்முடல் உன்மத்த மாமே. 
  • 6. மூலத் துவாரத்தை முக்கார மிட்டிரு
    மேலைத் துவாரத்தின் மேல்மனம் வைத்திரு
    வேலொத்த கண்ணை வெளியில் விழித்திரு
    காலத்தை வெல்லுங் கருத்திது தானே.
  • 7. எருவிடும் வாசற் கிருவிரல் மேலே
    கருவிடும் வாசற் கிருவிரற் கீழே
    உருவிடுஞ் சோதியை உள்கவல் லார்க்குக்
    கருவிடுஞ் சோதி கலந்துநின் றானே.
  • 8. ஒருக்கால் உபாதியை ஒண்சோதி தன்னைப்
    பிரித்துணர் வந்த உபாதிப் பிரிவைக்
    கரைத்துணர் வுன்னல் கரைதல்உள் நோக்கல்
    பிரத்தியா காரப் பெருமைய தாமே.
  • 9. புறப்பட்ட வாயுப் புகவிடா வண்ணந்
    திறப்பட்டு நிச்சயஞ் சேர்ந்துடன் நின்றால்
    உறப்பட்டு நின்றதவ் வுள்ளமும் அங்கே
    புறப்பட்டுப் போகான் பெருந்தகை யானே.