ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அருளும் அரசனும் ஆனையுந் தேரும்
    பொருளும் பிறர்கொள்ளப் போவதன் முன்னந்
    தெருளும் உயிரொடுஞ் செல்வனைச் சேரின்
    மருளும் பினைஅறன் மாதவ மன்றே. 
  • 2. இயக்குறு திங்கள் இருட்பிழம் பொக்கும்
    துயக்குறு செல்வத்தைச் சொல்லவும் வேண்டா
    மயக்கற நாடுமின் வானவர் கோனைப்
    பெயற்கொண்டல் போலப் பெருஞ்செல்வ மாமே.
  • 3. தன்னது சாயை தனக்குத வாதுகண்
    டென்னது மாடென் றிருப்பர்கள் ஏழைகள்
    உன்னுயிர் போம்உடல் ஒக்கப் பிறந்தது
    கண்ணது காணொளி கண்டுகொ ளீரே. 
  • 4. ஈட்டிய தேன்பூ மணங்கண் டிரதமும்
    கூட்டிக் கொணர்ந்தொரு கொம்பிடை வைத்திடும்
    ஓட்டித் துரந்திட் டதுவலி யார்கொளக்
    காட்டிக் கொடுத்தது கைவிட்ட வாறே. 
  • 5. தேற்றத் தெளிமின் தெளிந்தீர் கலங்கன்மின்
    ஆற்றுப் பெருக்கிற் கலக்கி மலக்காதே
    மாற்றிக் களைவீர் மறுத்துங்கள் செல்வத்தைக்
    கூற்றன் வருங்கால் குதிக்கலு மாமே. 
  • 6. மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
    கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
    அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
    சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 
  • 7. வாழும் மனைவியும் மக்கள் உடன்பிறந்
    தாரு மளவே தெமக்கென்பர் ஒண்பொருள்
    மேவு மதனை விரிவுசெய் வார்கட்குக்
    கூவுந் துணையொன்று கூடலு மாமே. 
  • 8. வேட்கை மிகுத்தது மெய்கொள்வார் இங்கிலை
    பூட்டுந் தறியொன்று போம்வழி ஒன்பது
    நாட்டிய தாய்தமர் வந்து வணங்கிப்பின்
    காட்டிக் கொடுத்தவர் கைவிட்ட வாறே. 
  • 9. உடம்பொ டுயிரிடை விட்டோடும் போது
    அடும்பரி சொன்றில்லை அண்ணலை எண்ணும்
    விடும்பரி சாய்நின்ற மெய்நமன் தூதர்
    சுடும்பரி சத்தையுஞ் சூழகி லாரே.