ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 6. செல்வம் நிலையாமை

பதிகங்கள்

Photo

மகிழ்கின்ற செல்வமும் மாடும் உடனே
கவிழ்கின்ற நீர்மிசைச் செல்லுங் கலம்போல்
அவிழ்கின்ற ஆக்கைக்கோர் வீடு பேறாகச்
சிமிழொன்று வைத்தமை தேர்ந்தறி யாரே. 

English Meaning:
Wealth is a Boat in Dangerous waters
How fast we cling to stock of cattle and riches gay
Less stable even than the boat which midstream upturns!
Likewise a bond ties the body to soul,
When it will give away no one knows.
Tamil Meaning:
மகிழ்ச்சிக்கு ஏதுவாகிய பல நுகர்ச்சிப் பொருள்களும், கைப்பொருளும் எந்த நேரத்திலும் கவிழத்தக்கதாய் நீரின்மேல் மிதந்து செல்லுகின்ற மரக்கலம் திடீரென ஒருகால் கவிழ்ந் தொழிதலைப்போல விழுந்தொழிகின்ற உடம்பிற்கு ஒரு பேரின்பப் பேறுபோலக் காட்டி, உண்மையில் பெரியதொரு பிணிப்பாக வினை யால் கூட்டுவிக்கப்பட்டிருத்தலை உலகர் அறிந்திலர்.
Special Remark:
`அதனால் அவற்றையே வீடுபேறாகக் கருதி அதன் கண் மயங்கி நின்று அழிகின்றனர்` என்றபடி. மாடு - காசு. செல்வம் - ஏனைய வளங்கள். `கவிழ்கின்ற கலம்` என இயையும். சிமிழ் - கட்டு. செல்வம் கட்டாதல், ஈட்டல் காத்தல்கள் காரணமாகச் செய்யப்படும் முயற்சிகளாலும், பற்றினாலும் உயிர்க்கு உறுதி நாடுதற்குக் காலம் பெறாதவாறு செய்தல். இம் மந்திரத்துள் மூன்றாம் எழுத்து எதுகை வந்தது.
இதனால், செல்வம் தான் நிற்கும் சிறிதுகாலத்திலும் பந்தமாயே நிற்றல் கூறப்பட்டது.