ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அஞ்சன மேனி அரிவையோர் பாகத்தன்
    அஞ்சொ டிருபத்து மூன்றுள ஆகமம்
    அஞ்சலி கூப்பி அறுபத் தறுவரும்
    அஞ்சாம் முகத்தில் அரும்பொருள் கேட்டதே.
  • 10. பண்டித ராவார் பதினெட்டுப் பாடையும்
    கண்டவர் கூறுங் கருத்தறி வார்என்க
    பண்டிதர் தங்கள் பதினெட்டுப் பாடைருளி
    அண்ட முதலான் அறஞ்சொன்ன வாறே. 
  • 2. அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
    எண்ணில் இருபத்தெண் கோடிநூ றாயிரம்
    விண்ணவர் ஈசன் விழுப்பம் உரைத்தனர்
    எண்ணிநின் றப்பொருள் ஏத்துவன் நானே.
  • 3. அண்ணல் அருளால் அருளுந்திவ் யாகமம்
    விண்ணில் அமரர் தமக்கும் விளங்கரி
    தெண்ணில் எழுபது கோடிநூ றாயிரம்
    எண்ணிலும் நீர்மேல் எழுத்தது ஆகுமே. 
  • 4. பரனாய்ப் பராபரங் காட்டி உலகில்
    தரனாய்ச் சிவதன்மந் தானேசொல் காலத்
    தரனாய் அமரர்கள் அற்சிக்கும் நந்தி
    உரனாகி ஆகமம் ஓங்கிநின் றானே. 
  • 5. சிவமாம் பரத்தினிற் சத்தி சதாசிவம்
    உவமா மகேசர் உருத்திர தேவர்
    தவமால் பிரமீசர் தம்மில்தாம் பெற்ற
    நவஆ கமம்எங்கள் நந்திபெற் றானே. 
  • 6. பெற்றநல் ஆகமம் காரணம் காமிகம்
    உற்றநல் வீரம் உயர்சிந்தம் வாதுளம்
    மற்றவ் வியாமள மாகுங்கா லோத்தரம்
    துற்றநற் சுப்பிரம் சொல்லும் மகுடமே. 
  • 7. அண்ணல் அருளால் அருளுஞ் சிவாகமம்
    எண்ணிலி கோடி தொகுத்திடு மாயினும்
    அண்ணல் அறைந்த அறிவறி யாவிடில்
    எண்ணிலி கோடியும் நீர்மேல் எழுத்தே. 
  • 8. மாரியும் கோடையும் வார்பனி தூங்கநின்
    றேரியு நின்றங் கிளைக்கின்ற காலத்து
    ஆரிய மும்தமி ழும்உட னேசொலிக்
    காரிகை யார்க்குக் கருணைசெய் தானே. 
  • 9. அவிழ்க்கின்ற வாறும் அதுகட்டு மாறுஞ்
    சிமிழ்த்தலைப் பட்டுயிர் போகின்ற வாறும்
    தமிழ்ச்சொல் வடசொல் எனும்இவ் விரண்டும்
    உணர்த்தும் அவனை உணரலு மாமே.