ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. கல்லா தவருங் கருத்தறி காட்சியை
    வல்லா ரெனில் அருட் கண்ணான் மதித்துளோர்
    கல்லாதார் உண்மைபற் றாநிற்பர் கற்றோருங்
    கல்லா தவர் இன்பங் காணகி லாரே. 
  • 10. ஆதிப் பிரான்அம ரர்க்கும் பரஞ்சுடர்
    சோதி அடியார் தொடரும் பெருந்தெய்வம்
    ஓதி உணரவல் லோம்என்பர் உள்நின்ற
    சோதி நடத்துந் தொடர்வறி யாரே. 
  • 2. வல்லார்கள் என்றும் வழியொன்றி வாழ்கின்றார்
    அல்லா தவர்கள் அறிவு பலஎன்பார்
    எல்லா இடத்தும் உளன்எங்கள் தம்இறை
    கல்லா தவர்கள் கலப்பறி யாரே. 
  • 3. நில்லா நிலையை நிலையாக நெஞ்சத்து
    நில்லாக் குரம்பை நிலையென் றுணர்வீர்காள்
    எல்லா வுயிர்க்கும் இறைவனே யாயினும்
    கல்லாதார் நெஞ்சத்துக் காணவொண் ணாதே. 
  • 4. கில்லேன் வினைதுய ரார்க்கும் அயலானேன்
    கல்லேன் அரனெறி கல்லாத் தகைமையின்
    வல்லேன் வழங்கும் பொருளே மனத்தின்உட்
    கல்லேன் கழியநின் றாடவல் லேனே.
  • 5. நில்லாது சீவன்நிலையன் றெனவெண்ணி
    வல்லார் அறத்தும் தவத்துளும் ஆயினார்
    கல்லா மனித்தர் கயவர் உலகினில்
    பொல்லா வினைத்துயர் போகஞ்செய் வாரே. 
  • 6. விண்ணினின் உள்ளே விளைந்த விளங்கனி
    கண்ணினின் உள்ளே கலந்தங் கிருந்தது
    மண்ணினின் உள்ளே மதித்து மதித்துநின்
    றெண்ணி எழுதி இளைத்துவிட் டாரே. 
  • 7. கணக்கறிந் தார்க்கன்றிக் காணவொண் ணாது
    கணக்கறிந் தார்க்கன்றிக் கைகூடா காட்சி
    கணக்கறிந் துண்மையைக் கண்டண்ட நிற்கும்
    கணக்கறிந் தார்கல்வி கற்றறிந் தாரே.
  • 8. கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
    கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
    கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
    கல்லாத மூடர் கருத்தறி யாரே. 
  • 9. கற்றுஞ் சிவஞானம் இல்லாக் கலதிகள்
    சுற்றமும் வீடார் துரிசறார் மூடர்கள்
    மற்றும் பலதிசை காணார் மதியிலோர்
    கற்றன்பில் நிற்போர் கணக்கறிந் தார்களே.