ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 25. கல்லாமை

பதிகங்கள்

Photo

கல்லாத மூடரைக் காணவும் ஆகாது
கல்லாத மூடர்சொல் கேட்கக் கடன் அன்று
கல்லாத மூடர்க்குக் கல்லாதார் நல்லராம்
கல்லாத மூடர் கருத்தறி யாரே. 

English Meaning:
The fools, of learning devoid, unfit for us even to see
The fools, of learning devoid, their words unfit to hear
The fools, of learning devoid, in fools find their friends,
The fools, of learning devoid, to Wisdom come no near.
Tamil Meaning:
கல்வி இல்லாதவர் மூடரே ஆதலால், அவர் யாதோர் உறுதியினையும் அறியார். அதனால் அவரைக் காணுதலும், அவர் சொல்லைக் கேட்டலும் தகுதியாவன அல்ல. அவர்க்கும், அவர் போலும் கல்லாத மூடரே தக்கவராய்த் தோன்றுதலன்றிக் கற்ற அறிவினர் தக்கவராய்த் தோன்றார்.
Special Remark:
ஈற்றடியை முதலிற்கொண்டு உரைக்க. அதன் இறுதி யில் `ஆதலால்` என்பது எஞ்சி நின்றது. ``காணவும்`` என்ற உம்மை இழிவு சிறப்பு. இழிவு, காட்சியளவில் பெறுவதும் தீமையேயாதல்.
இதனால், கல்லாதாரால் உலகிற்குத் தீங்கு உண்டாதல் கூறப்பட்டது.