ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எட்டி பழுத்த இருங்கனி வீழ்ந்தன்ன
    ஒட்டிய நல்லறஞ் செய்யா தவர்செல்வம்
    வட்டிகொண் டீட்டியே மண்ணின் முகந்திடும்
    பட்டிப் பதகர் பயன்அறி யாரே. 
  • 10. கனிந்தவர் ஈசன் கழலடி காண்பர்
    துணிந்தவர் ஈசன் துறக்கம தாள்வர்
    மலிந்தவர் மாளுந் துணையுமொன் றின்றி
    மெலிந்த சினத்தினுள் வீழ்ந்தொழிந் தாரே. 
  • 2. ஒழிந்தன காலங்கள் ஊழியும் போயின
    கழிந்தன கற்பனை நாளுங் குறுகிப்
    பிழிந்தன போலத்தம் பேரிடர் ஆக்கை
    அழிந்தன கண்டும் அறம்அறி யாரே. 
  • 3. அறம்அறி யார்அண்ணல் பாதம் நினையுந்
    திறம்அறி யார்சிவ லோக நகர்க்குப்
    புறம்அறி யார்பலர் பொய்ம்மொழி கேட்டு
    மறம்அறி வார்பகை மன்னிநின் றாரே. 
  • 4. இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
    தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
    உருமிடி நாக முரோணி கழலை
    தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே. 
  • 5. பரவப் படுவான் பரமனை ஏத்தீர்
    இரவலர்க் கீதலை யாயினும் ஈயீர்
    கரகத்தால் நீரட்டிக் காவை வளர்க்கீர்
    நரகத்தில் நிற்றிரோ நாள்எஞ்சி னீரே.
  • 6. வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
    கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
    மழிநடக் கும்வினை மாசற வோட்டி
    ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.
  • 7. கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
    நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
    இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
    படுவது செய்யிற் பசுவது வாமே.
  • 8. இன்பம் இடரென் றிரண்டுற வைத்தது
    முன்பவர் செய்கையி னாலே முடிந்தது
    இன்பம் அதுகண்டும் ஈகிலாப் பேதைகள்
    அன்பிலார் சிந்தை அறம்அறி யாரே.
  • 9. செல்வங் கருதிச் சிலர்பலர் வாழ்வெனும்
    புல்லறி வாளரைப் போற்றிப் புலராமல்
    இல்லங் கருதிஇறைவனை ஏத்துமின்
    வில்லி இலக்கெய்த விற்குறி யாமே.