ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

இருமலுஞ் சோகையும் ஈளையும் வெப்புந்
தருமஞ்செய் யாதவர் தம்பால வாகும்
உருமிடி நாக முரோணி கழலை
தருமஞ்செய் வார்பக்கல் சாரகி லாவே. 

English Meaning:
Consumption and anaemia, asthma and colic pain—
Such the lot of those who nothing in charity give;
Snake and thunder, sore throat and fleshly ills,
Approach not them that the other`s needs relieve

Tamil Meaning:
பலவகை நோய்களும், இடைஇறப்பும் (அவ மிருத்தும்) போல்வனவாகிய இம்மைத் துன்பங்கள் பலவும் அறம் செய்யாதவரிடத்தே செல்வன; அறஞ்செய்வார் இருக்கும் திசையை யும் அவை நோக்கா.
Special Remark:
இரண்டாம் அடியை ஈற்றடியின் முன்னே வைத்து உரைக்க. உரும் இடி - பேரிடி. நாகம் - பாம்பு. உரோணி - ரோகிணி; நோயுடையாள்; அஃது ஆகுபெயராய் அவளால் வரும் நோயைக் குறித்தது. இனி, `உரோணியால் வரும்கழலை` என்றலுமாம். கழலை - கட்டி. பக்கல் - திசை. இருமல் முதலியன இன்னவாதல் சிவ பெருமானது சீற்றத்தாலும், அருளாலுமாம்.
இதனால், அறம் செய்யாதவர்க்கும், செய்பவர்க்கும் இம்மை யில் உளவாகும் நலந் தீங்குகள் கூறப்பட்டன.