ஓம் நமசிவாய

முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்

பதிகங்கள்

Photo

வழிநடப் பாரின்றி வானோர் உலகங்
கழிநடப் பார்கடந் தார்கரும் பாரும்
மழிநடக் கும்வினை மாசற வோட்டி
ஒழிநடக் கும்வினை ஓங்கி நின்றாரே.

English Meaning:
Unescorted, alone, the charity-less their last journey make,
And miss their track, journeying thus, in birth-cycle caught in the world,
They know not how the binding Karmas to dispel,
And so slip and fall to be irretrievably lost.
Tamil Meaning:
உலகில் நல்வழியில் நடத்தல் இன்றி மேலுலகம் கிடையாதொழியும் தீய வழியிலே நடக்கின்றவரே பலர். அவரொழிய, ஞானம் நிகழம் செயல்கள், மிகப் பெற்ற சிலரே, கேடு நிகழ்தற்கு ஏதுவான பாவத்தை நீக்கி நரகத்தையும் கடந்தவராவர்.
Special Remark:
இத்திருமந்திரத்துள் பாடங்கள் பல்வேறு வகை யாய்க் காணப்படுகின்றன. அவை, `கடந்தார் - நடந்தார், கரும் பாரும் - கருப்பாரும், மழி - வழி, மாசற ஓட்டிட்டு ஒழி நடப்பார் வினை ஓங்கி நின்றாரே - மாசற ஓட்டிட வழிநடக்கும் மளவீழ்ந்தொழிந்தாரே` என்பன.
கழி` என்பது, `கழிய` எனப் பொருள் தந்தது. கரும்பார் - இருளுலகம். மழி - மழித்தல்; முதனிலைத் தொழிற்பெயர். `ஒளி` என்பது, எதுகை நோக்கி `ஒழி` எனத் திரிந்து நின்றது. ஒளி - ஞானம்.
இதனால், ஞான நெறியில் நிற்பார்க்கு அறம் தானே உளதாதல் கூறப்பட்டது.