
ஓம் நமசிவாய
முதல் தந்திரம் - 20. அறஞ்செயான் திறம்
பதிகங்கள்

கெடுவது மாவதுங் கேடில் புகழோன்
நடு அல்ல செய்தின்பம் நாடவும் ஒட்டான்
இடுவதும் ஈவதும் எண்ணுமின் இன்பம்
படுவது செய்யிற் பசுவது வாமே.
English Meaning:
They, whose hearts melt in charity, see the Feet of the Lord,The steadfast of faith attain Swarga`s might,
But those sinful ones of charity bereft, helpless, forsaken,
Engulfed in passions low, pass into eternal night.
Tamil Meaning:
உயிர்கள் நலம்பெறுதலும், தீங்குறுதலும் இறைவன் செய்யும் நடுவு நிலைமையே (நீதியே) அதனால், அவை அறம் அல்லாதவற்றைச் செய்து அவற்றானே இன்பம் அடைய விரும் புதலை அவன் ஒருபோதும் உடன்படான்.ஆகையால், மாந்தரீர், இன்பம் கெடுதற்கு ஏதுவாகிய பாவத்தைச் செய்தல் விலங்கின் செயலேயாகி விடும்; அதனை அறிந்து நீவிர் உயர்ந்தோர்க்குக் கொடுத்தலையும், தாழ்ந்தோர்க்கு ஈதலையும் செய்ய நினையுங்கள்.
Special Remark:
கெடுவதும் ஆவதும் என்னும் எழுவாய்கள் `நடு` என்னும் பெயர்ப் பயனிலை கொண்டன.`நடு` என்னும் இடப்பெயர் முன்னர் அதன்கண் நிற்றலைக் குறித்துப் பின்நின்று செய்தலைக் குறித்தது. ``செய்து`` என்றது, ``நாட`` என்பதனோடு முடிந்தது. ``நாடவும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. ``அது பசுவாம்`` என மாற்றுக.
பசு, ஆகுபெயர்.
இதனால், அறம் செய்பவரையே இறைவன் விரும்புதல் கூறப்பட்டது.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage