ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. தாமறி வாரண்ணல் தாள்பணி வாரவர்
    தாமறி வாரறந் தாங்கிநின் றாரவர்
    தாமறி வார்சில தத்துவ ராவர்கள்
    தாமறி வார்க்குத் தமன்பர னாமே.
  • 2. யாவர்க்கு மாம்இறை வற்கொரு பச்சிலை
    யாவர்க்கு மாம்பசு வுக்கொரு வாயுறை
    யாவர்க்கு மாம்உண்ணும் போதொரு கைப்பிடி
    யாவர்க்கு மாம்பிறர்க் கின்னுரை தானே. 
  • 3. அற்றுநின் றாருண்ணும் ஊணே அறனென்னுங்
    கற்றன போதங் கமழ்பவர் மானிடர்
    உற்றுநின் றாங்கொரு கூவற் குளத்தினிற்
    பற்றிவந் துண்ணும் பயன்அறி யாரே. 
  • 4. அழுக்கினை ஓட்டி அறிவை நிறையீர்
    தழுக்கிய நாளில் தருமமுஞ் செய்யீர்
    விழித்திருந் தென்செய்வீர்? வெம்மை பரந்து
    இழுக்கவன் றென்செய்வீர்? ஏழைநெஞ் சீரே.
  • 5. தன்னை அறியாது தாம்நலர் என்னாதிங்
    கின்மை யறியா திளையரென் றோராது
    வன்மையில் வந்திடும் கூற்றம் வருமுன்னம்
    தன்மமும் நல்ல தவஞ்செய்யும் நீரே.
  • 6. துறந்தான் வழிமுதற் சுற்றமும் இல்லை
    இறந்தான் வழிமுதல் இன்பமும் இல்லை
    மறந்தான் வழிமுதல் வந்திலன் ஈசன்
    அறந்தான் அறியும் அளவறி வாரே. 
  • 7. தான்தவஞ் செய்வதாம் செய்தவத் தவ்வழி
    மான்தெய்வ மாக மதிக்கும் மனிதர்கள்
    ஊன்தெய்வ மாக உயிர்க்கின்ற பல்லுயிர்
    நான்தெய்வம் என்று நமன்வரு வானே. 
  • 8. திளைக்கும் வினைக்கடல் தீர்வுறு தோணி
    இளைப்பினை நீக்கும் இருவழி உண்டு
    கிளைக்குந் தனக்கும்அக் கேடில் புகழோன்
    விளைக்குந் தவம்அறம் மேற்றுணை யாமே. 
  • 9. பற்றது வாய்நின்ற பற்றினைப் பார்மிசை
    அற்றம் உரையான் அறநெறிக் கல்லது
    உற்றுங்க ளால்ஒன்றும் ஈந்தது வேதுணை
    மற்றண்ணல் வைத்த வழிகொள்ளு மாறே.