ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Paadal

  • 1. அம்புயம் நீலம் கழுநீர் அணிநெய்தல்
    வம்பவிழ் பூகமும் மாதவி மந்தாரம்
    தும்பை வகுளம் சுரபுன்னை மல்லிகை
    செண்பகம் பாதிரி செவ்வந்தி சாத்திடே.
  • 10. ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
    நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
    பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
    வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.
  • 11. நமஅது ஆசன மான பசுவே
    சிவமது சித்திச் சிவமாம் பதியே
    நமஅற ஆதி நாடுவ தன்றாம்
    சிவமாகும் மாமோனம் சேர்தல்மெய் வீடே.
  • 12. தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
    ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
    ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
    வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.
  • 2. சாங்கம தாகவே சாந்தொடு சந்தனம்
    தேங்கமழ் குங்குமம் கர்ப்பூரம் காரகில்
    பாங்கு படப்பனி நீராற் குழைத்துவைத்
    தாங்கே அணிந்துநீர் அற்சியும் அன்பொடே.
  • 3. அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
    பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
    துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
    இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.
  • 4. எய்தி வழிபடில் எய்தா தனஇல்லை
    எய்தி வழிபடில் இந்திரன் செல்வம்உண்
    டெய்தி வழிபடில் எண்சித்தி உண்டாகும்
    எய்தி வழிபடில் எய்திடும் முத்தியே
  • 5. நண்ணும் பிறதாரம் நீத்தார் அவித்தார்
    அண்ணிய நைவேத் தியம்அனு சந்தானம்
    நண்ணிய பஞ்சாங்கம் நண்ணும் செபம்மன்னும்
    மண்ணும் அனல்பவ னத்தொடு வைகுமே.
  • 6. வேண்டார்கள் கன்மம் விமலனுக் காட்பட்டோர்
    வேண்டார்கள் கன்மம் அதில் இச்சை யற்றபேர்
    வேண்டார்கள் கன்மம் மிகுசிவ யோகிகள்
    வேண்டார்கள் கன்மம் மிகுதியோர் ஆய்ந்தன்பே.
  • 7. அறிவரு ஞானத் தெவரும் அறியார்
    பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
    நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
    எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.
  • 8. இருளும்வெளி யும்போல் இரண்டாம் இதயம்
    மருள்அறி யாமையும் மன்னும் அறிவும்
    அருள் இவை விட்டறியாமை மயங்கும்
    மருளும் சிதைத்தோ ரவர்களா வாரே.
  • 9. தானவ னாக அவனேதா னாயிட
    ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
    போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
    தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.