ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

தெளிவரும் நாளில் சிவஅமு தூறும்
ஒளிவரும் நாளில் ஓர் எட்டில் உகளும்
ஒளிவரும் அப்பதத் தோரிரண் டாகில்
வெளிதரும் நாதன் வெளியாய் இருந்தே.

English Meaning:
Visions in the Seventh, Eighth, Eleventh and Twelth Centers

Yoga its consummation reaches
In Nectar`s flow in Centre Seventh;
In the Eighth is revealed the Jnana Light;
Then beyond in the Eleventh
Is Paraparam the Supreme;
Then beyond, beyond is Void,
The Dvadasanta Space Infinite.
Tamil Meaning:
`சிவனன்றி வேறு யாதும் இல்லை` என்ற தெளிவு வந்து சிவத்தில் அழுந்தித் தன்னையும் மறந்த பொழுதே சிவானந்தம் ஊற்றெடுப்பதாகும். அவ்வாறன்றி, `சிவனை யான் உணர்கின்றேன்` எனத் தன்னை உணர்ந்து நிற்றலாகிய அறிவு உண்டாய காலத்தில் ஆன்மா அந்தப்பசு அறிவிலே நின்று அலமரும். ஒருதலைப்படாது இவ்வாறு இருதலைப்பட்டு நிற்கும் நிலையில் சிவம் வெளிப்பட்டு நின்றும் வெளிப்படாததேயாய் இருக்கும்.
Special Remark:
எட்டு - அகாரம். அது நாதத்தைக் குறித்தல் வழக்கு. `பசுபோதம் தலையெடுத்தும் வழி வாக்காகிய பாச ஞானமும் விரையத் தோன்றி அலைவை உண்டு பண்ணும், என்பார், ``எட்டிலே உகளும்`` என்றார். `இவ்வாறு ஓரிரண்டாகில்` என அனுவாத மாக்கியுரைக்க. ``வெளி`` இரண்டில், முன்னது புறம்; பின்னது வெளிப்படை. திரிபுடி நீங்காதாயின் அருள் நிலையன்றி, ஆனந்த நிலை எய்தாமை பற்றி `நாதன் வெளியாய் இருந்தே வெளிதரும்` என்றார். வெளிதருதல் - ஆன்மாவிற்குத் தன்னின் வேறான இடத்தைத் தருதல். திரிபுடி - காண்பான், காட்சி, காட்சிப் பொருள் என்பனவாம். `ஞாதுரு, ஞானம், ஞேயம்` என்றும் சொல்லப்படும்.
இதனால், `திரிபுடி நீங்கும் தெளிவைப் பெறமுயல வேண்டும்` என்பது கூறப்பட்டது.