
ஓம் நமசிவாய
நான்காம் தந்திரம் - 3. அருச்சனை
பதிகங்கள்

அன்புட னேநின் றமுதமும் ஏற்றியே
பொன்செய் விளக்கும் புகையும் திசைதொறும்
துன்பம் அகற்றித் தொழுவார் நினையுங்கால்
இன்ப முடனேவந் தெய்திடும் முத்தியே.
English Meaning:
Offer OblationsOffer oblations in love,
Light lamps golden,
Spread incense of fragrant wood
And lighted camphor in directions all,
Forget your worldly worries, and meditate,
You shall attain rapturous Mukti true.
Tamil Meaning:
நிவேதனம், தீபம், தூபம் என்பவைகளால், எட்டுத் திக்கிலும் வரற்பாலனாவாகிய தடைகளை அகற்றி வழிபாடு செய்பவர், தாம் விரும்பும் பொழுது முத்திநிலை இன்பமே வடிவாய் வந்து எய்தப் பெறுவர்.Special Remark:
ஏற்றுதல் - ஏற்பித்தல். பொன் - உலோகம். `பொன் னால் செய்த` என்க. அமுதம் முதலிய மூன்றிலும் மூன்றாம் உருபு விரிக்க. முதலிரண்டடிகளை வேறாக ஓதுவன பாடம் அல்ல. திசை தொறும் வரும் துன்பங்கள் தீத் தெய்வங்களால் ஆவன. அவற்றைத் திக்குப் பந்தனம் முதலியவற்றால் நீக்கல் வேண்டும் என்க.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage