ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

ஓங்காரம் உந்திக்கீழ் உற்றிடும் எந்நாளும்
நீங்கா அகராமும் நீள்கண்டத் தாயிடும்
பாங்கார் உகாரம் பயில்நெற்றி உற்றிடும்
வீங்காகும் விந்துவும் நாதம்மேல் ஆகுமே.

English Meaning:
Where Om and Other Letters Rise

``Om`` rises from under navel
``Va`` rises from throat stretched,
``Na`` has its seat in forehead,
Bindu and Nada are still above placed.
Tamil Meaning:
பிரணவத் தியானத்தில் ஓங்காரம் மூலாதாரத்திலும், மகாரம் உந்தியிலும், அகாரம் இருதயம்,கண்டம் என்ப வற்றிலும், உகாரம் புருவ நடுவிலும், விந்துவும் நாதமும் அதற்குமேல் நெற்றியில் உள்ள வேறு வேறு இடங்களிலும் வைத்துத் தியானிக்கப்படும் என்க.
Special Remark:
மகாரம் நிற்கும் இடம் குறிப்பினாற் கொள்ள வைத்தார். `பாங்கார் நகாரம்` என்பது பாடம் ஆகாமை யறிக.
இதனால், வழிபாட்டில் பிரணவத்தைத் தியானிக்கும் முறை கூறப்பட்டது.