ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

அறிவரு ஞானத் தெவரும் அறியார்
பொறிவழி தேடிப் புலம்புகின் றார்கள்
நெறிமனை யுள்ளே நிலைபெற நோக்கில்
எறிமணி யுள்ளே இருக்கலும் ஆமே.

English Meaning:
Seek God the Jnana Way

They know not to reach Him by Jnana Divine;
They seek Him by ways of senses, in vain;
If within you, you constantly seek Him in the right way,
You shall indeed be in Nadanta.
Tamil Meaning:
அறிவுருவாகிய இறைவனை எவரும் அவனறி வாலே அறிய முயலாமல் தம் அறிவால் ஐம்பொறிகளாலும், மனம் முதலிய உட்கருவிகளாலும் ஆராய்ந்து துன்புறுகின்றார்கள். ஆயினும், முறைப்படி, மேற்கூறிய சக்கரம் முதலியவற்றின் வழி மனம் ஒருங்கிநினைத்தால், ஒளி வீசுகின்ற மாணிக்கம் போல்பவனாகிய இறைவனது அருளில் மூழ்கியிருத்தல் கூடும்.
Special Remark:
`அறிவு அறியார்` என இயையும். `ஞானம்` என்பது சிறப்புப்பற்றிப் பதி ஞானத்தையே குறித்தல் வழக்கு முறைமை. `நெறி யால் நோக்கில்` என்க. மனை, இங்குச் சக்கரத்தில் உள்ள அறைகள். இனம் பற்றிக் கும்ப விம்ப தம்பங்களும் கொள்க.
இதனால் `வழிபாடுகள் பதிஞானத்தைத் தந்து, அது வழி யாகப் பதியை அடைவிக்கும்` என்று அதனது சிறப்புக் கூறப்பட்டது.