ஓம் நமசிவாய

நான்காம் தந்திரம் - 3. அருச்சனை

பதிகங்கள்

Photo

தானவ னாக அவனேதா னாயிட
ஆன இரண்டில் அறிவன் சிவமாகப்
போனவன் அன்பிது நாலாம் மரபுறத்
தானவன் ஆகும்ஓர் ஆசித்த தேவனே.

English Meaning:
Jnana Alone Leads to Union in God

Yourself Himself becoming,
And Himself yourself becoming
And with two none,
And as one Siva Becoming;
(When thus it is),
Those who went the way of Kriya
If they take to Jnana,
They with Siva one become;
They who seek Kriya,
May but Devas be.
Tamil Meaning:
சிவம் தான் தோன்றாது ஆன்மாவேயாய் நிற்றலும், ஆன்மா தான்தோன்றாது சிவமேயாய் நிற்றலும் என்னும் இருநிலைகளுள், அறிபவனாகிய ஆன்மா அறியப்படுபொருளாகிய சிவமேயாகி விடுகின்ற இரண்டாம் நிலையை எய்தினவன் பின்பு `அறிபவன்` என்பதோடு நில்லாது, அன்பு செய்பவனாயும் நிற்பான். இந்நிலையே, `சிவ ரூபம், சிவதரிசனம், சிவ யோகம், சிவ போகம்` என்னும் நான்கனுள் இறுதிக்கண்ணதாகிய சிவபோகத்தை அடையச் சிவமாம் தன்மையை எய்தும் வழியாம்.
Special Remark:
இரண்டு: பெத்தமும், முத்தியும். ``அவனே தானே ஆகிய அந்நெறி - ஏக னாகி`` என்னும் சிவஞானபோதத்தை இங்கு உடன் வைத்துக் காண்க. அன்பு வடிவானவனை,``அன்பு`` என்றார். ஈற்றடியை` தான் ஆசித்ததேவனாகிய அவனாகும் ஓர் நிலை` எனக் கொண்டு கூட்டிக் கொள்க. `ஆசிரயித்த` என்பது ``ஆசித்த`` எனச் சிதைந்து நின்றது. `யாசித்த` எனப் பாடம் ஓதலுமாம். யாசித்தல் - வேண்டுதல்.
இதனால், பதி ஞானம் முதிர்ந்து முற்றுமாறு கூறப்பட்டது.