ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உள்ளத்துள் ஓம்எனும் ஈசன் ஒருவனை
    உள்ளத்து ளேஅங்கி யாய ஒருவனை
    உள்ளத்து ளேநீதி யாய ஒருவனை
    உள்ளத்து ளேஉறல் ஆகாய மாமே.
  • 10. புறத்துள்ஆ காசம் புவனம் உலகம்
    அகத்துள்ஆ காசம்எம் ஆதி அறிவு
    சிவத்துள்ஆ காசம் செழுஞ்சுடர்ச் சோதி
    சகத்துள்ஆ காசந் தான்அம் சமாதியே.
  • 2. பெருநில மாய்அண்ட மாய்அண்டத் தப்பால்
    குருநில மாய்நின்ற கொள்கையன் ஈசன்
    பெருநில மாய்நின்று தாங்கிய தாளோன்
    அருநில மாய்நின்ற ஆதிப் பிரானே.
  • 3. அண்ட ஒளியும் அகண்ட ஒளியுடன்
    பிண்ட ஒளியால் பிதற்றும் பெருமையை
    உண்ட வெளிக்குள் ஒளிக்குள் ஒளித்தது
    கொண்ட குறியைக் குலைத்தது தானே.
  • 4. பயனுறு கன்னியர் போகத்தின் உள்ளே
    பயனுறும் ஆதி பரஞ்சுடர்ச் சோதி
    அயனொடு மால்அறி யாவகை நின்றிட்(டு)
    உயர்நெறி யாய்வெளி ஒன்றது வாமே.
  • 5. அறிவுக் கறிவாம் அகண்ட ஒளியும்
    பிறியா வலத்தினிற் பேரொளி மூன்றும்
    அறியா தடங்கிடில் அத்தன் அடிக்குள்
    பிறியா திருக்கிற் பெருங்காலம் ஆமே.
  • 6. ஆகாச வண்ணன் அமரர் குலக்கொழுந்(து)
    ஏகாச மாசுணம் இட்டங் கிருந்தவன்
    ஆகாச வண்ணம் அமர்ந்துநின் றப்புறம்
    ஆகாச மாய்அங்கி வண்ணனு மாமே.
  • 7. உயிர்க்கின்ற வாறும் உலகமும் ஒக்க
    உயிர்க்கின்ற உள்ளொளி சேர்கின்ற போது
    குயிற்கொண்ட பேதை குலாவி உலாவி
    வெயிற்கொண்டென் உள்ளம் வெளியது வாமே.
  • 8. நணுகில் அகல்கிலன் நாதன் உலகத்(து)
    அணுகில் அகன்ற பெரும்பதி நந்தி
    நணுகிய மின்னொளி சோதி வெளியைப்
    பணியின் அமுதம் பருகலும் ஆமே.
  • 9. மிக்கார் அமுதுண்ண நஞ்சுண்ட மேலவன்
    தக்கார் உரைத்த தவநெறி யேசென்று
    புக்கால் அருளும் பொன்னுரை ஞானத்தை
    நக்கார்க் கழல்வழி நாடுமின் நீரே.