ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. எப்பாழும் பாழாம் யாவுமாய் அன்றாகி
    முப்பாழும் கீழுள முப்பாழும் முன்னியே
    இப்பாழும் இன்னவா றென்ப திலாஇன்பத்
    தற்பரஞா னானந்தத் தான்அது வாகுமே.
  • 2. மன்சத்தி ஆதி மணிஒளி மாசோபை
    அன்னதோ டொப்ப மிடல்ஒன்றா மாறது
    இன்னியல் உற்பலம் ஒண்சீர் நிறம் மணம்
    பன்னிய சோபை பகர் ஆறும் ஆனதே.
  • 3. சத்தி சிவம்பர ஞானமும் சாற்றுங்கால்
    உய்த்த அனந்தம் சிவம்உயர் ஆனந்தம்
    வைத்த சொரூபத்த சத்தி வருகுரு
    உய்த்த உடல் இவை உற்பலம் போலுமே.
  • 4. உருஉற் பலம்நிறம் ஒண்மணம் சோபை
    தரம்நிற்ப போல்உயிர் தற்பரந் தன்னில்
    மருவச் சிவமென்ற மாமுப் பதத்தின்
    சொரூபத்தன் சத்தியாதி தோன்ற நின்றானே.
  • 5. நினையும் அளவில் நெகிழ வணங்கிப்
    புனையில் அவனைப் பொதியலும் ஆகும்
    எனையும்எங் கோன்நந்தி தன்னருள் கூட்டி
    நினையும் அளவில் நினைப்பித் தனனே.
  • 6. பாலொடு தேனும் பழத்துள் இரதமும்
    வாலிய பேரமு தாகும் மதுரமும்
    போலும் துரியம் பொடிபட உள்புகச்
    சீலம் மயிர்க்கால் தொறும்தேக் கிடுமே.
  • 7. அமரத் துவங்கடந் தண்டங் கடந்து
    தமரத்து நின்ற தனிமையன் ஈசன்
    பவளத்து முத்துப் பனிமொழி மாதர்
    துவளற்ற சோதி தொடர்ந்துநின் றானே.
  • 8. மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
    சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
    பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
    சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.
  • 9.  சிவமாய் அவமான மும்மலம் தீர்ந்து
    பவமான முப்பாழைப் பற்றறப் பற்றத்
    தவமான சத்திய ஞானனந் தத்தே
    துவமார் துரியம் சொரூபம தாமே.