ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 18. சத்திய ஞானானந்தம்

பதிகங்கள்

Photo

மத்திமம் ஆறாறும் மாற்றி மலம்நீக்கிச்
சுத்தம தாகும் துரியத் துரிசற்றுப்
பெத்த மறச்சிவ மாகிப் பிறழ்வுற்றுச்
சத்திய ஞானானந் தஞ்சார்ந்தான் ஞானியே.

English Meaning:
How Jnanis Reach Satya-Jnana-Ananda

The Tattvas six times six
That in Eye-brow Centre stand
In Waking State,
They left behind;
They rid themselves of Malas;
Were purified in Turiya that is Pure (Suddha);
Freed of the bondage condition (Baddha)
They became Siva;
Beyond that they ascended into
Satya-Jnana-Ananda (Truth-Knowledge-Bliss that is Sat-Chit-Ananda).
They, the Jnanis True.
Tamil Meaning:
`மத்தியாலவத்தை` எனப்படும் சகலத்திற் சகலமாகிய மாசகலத்திலே முப்பத்தாறு கருவிகளுள் யாதொன்றும் ஒடுங்காது எழுச்சியுற்றிருப்பினும் தான் அவற்றின் வசப்படாது, அவற்றை வேறு நிறுத்தி, அங்ஙனம் நிறுத்தியதனால் கேவலாவத்தை வந்துவிடாதபடி அதனையும் நீக்கிச் சகலத்திற் சுத்தமாகிய நின்மலாவத்தையை அடைந்து, பின் `அதுவும் சீவச் செயலேயாம். என அதனை நீக்கிப் பரா வத்தையை எய்தியவழியே பந்தம் முற்றும் நீங்கிய நிலையாகும். அந் நிலையை அடைந்து, `சீவன்` என்னும் நிலைமை மாறி, `சிவம்` என்னும் நிலைமையை அடைந்து, அதனால் சத்திய ஞானானந்தத்தை அடைந்தவனே நிறைவான ஞானத்தை அடைந்தவனாவான்.
Special Remark:
``மத்திமம்`` என்றது மத்தியாலவத்தையை. `மத்திமத் தின்கண்` என ஏழாவது விரிக்க. ``மாற்றி`` என்றதும் `நீக்கி` என்றதே. `பிறழ்வுற்றுச் சிவமாகி` என மாறிக்கூட்டுக. ``சார்ந்தான்`` என்பது வினையாலணையும் பெயர். `சார்ந்தானே ஞானி` என ஏகாரத்தை மாற்றி வைத்துரைக்க.
இதனால், சத்திய ஞானானந்தமே நிறைஞானத்தின் பயனாதல் கூறப்பட்டது.