ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஞானத்தின் மிக்க அறநெறி நாட்டில்லை
    ஞானத்தின் மிக்க சமயமும் நன்றன்று
    ஞானத்தின் மிக்கவை நன்முத்தி நல்காவாம்
    ஞானத்தின் மிக்கார் நரரின்மிக் காரே.
  • 10. ஞானச் சமயமே நாடுந் தனைக்காண்டல்
    ஞான விசேடமே நாடு பரோதயம்
    ஞானநிர் வாணமே நன்றறி வானருள்
    ஞானாபி டேகமே நற்குரு பாதமே.
  • 2. சத்தமும் சத்த மனமும் தகுமனம்
    உய்த்த உணர்வும் உணர்த்தும் அகந்தையும்
    சித்தம்என் றிம்மூன்றும் சிந்திக்கும் செய்கையும்
    சத்தங் கடந்தவர் பெற்றசன் மார்க்கமே.
  • 3. தன்பால் உலகம் தனக்கரு காவதும்
    அன்பால் எனக்கரு ளாவது மாவன
    என்பார்கள் ஞானமும் எய்தும் சிவோகமும்
    பின்பாலின் நேயமும் பெற்றிடுந் தானே.
  • 4. இருக்குஞ் சேம இடம்பிரம மாகும்
    வருக்கஞ் சராசர மாகும் உலகம்
    தருக்கிய ஆசார மெல்லாந் தருமே
    திருக்கிலா ஞானத்தைத் தேர்ந்துணர்ந் தோர்க்கே.
  • 5. அறிவும் அடக்கமும் அன்பும் உடனே
    பிறியா நகர்மன்னும் பேரரு ளாளன்
    குறியுங் குணமும் குரைகழல் நீங்கா
    நெறியறி வார்க்கிது நீத்தொளி யாமே.
  • 6. ஞானம் விழைந்தெழு கின்றதோர் சிந்தையுள்
    யானம் விழைந்தெதி ரேகாண் வழிதொறும்
    கூனல் மதிமண் டலத்தெதிர் நீர்கண்டு
    ஊனம் அறுத்துநின் றொண்சுட ராகுமே.
  • 7. ஞானிக் குடன்குணம் ஞானத்தில் நான்குமாம்
    மோனிக் கிவைஒன்றும் கூடா முன் மோகித்து
    மேனிற்ற லால்சத்தி வித்தை விளைத்திடும்
    தானிக் குலத்தோர் சரியை கிரியையே.
  • 8. ஞானத்தில் ஞானாதி நான்குமாம் ஞானிக்கு
    ஞானத்தில் ஞானமே நான்என தென்னாமை
    ஞானத்தில் யோகமே நாதாந்த நல்லொளி
    ஞானக் கிரியையே நன்முத்தி நாடலே.
  • 9. நண்ணிய ஞானத்தில் ஞானாதி நண்ணுவோன்
    புண்ணிய பாவம் கடந்த பிணக்கற்றோன்
    கண்ணிய நேயம் கரைஞானம் கண்டுளோன்
    திண்ணிய சுத்தன் சிவமுத்தன் சித்தனே.