ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. ஆகின்ற நந்தி யடித்தா மரைபற்றிப்
    போகின் றுபதேசம் பூசிக்கும் பூசையும்
    ஆகின்ற ஆதாரம் ஆறா(று) அதனின்மேற்
    போகின்ற பொற்பையும் போற்றகின் றேனே.
  • 10. இராப்பக லற்ற இடத்தே யிருந்து
    பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
    இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
    இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.
  • 2. பெருந்தன்மை நந்தி பிணங்கிருள் நேமி
    இருந்தன்மை யாலும்என் நெஞ்சிடங் கொள்ள
    வருந்தன்மை யளனை வானவர் தேவர்
    தருந்தன்மை யாளனைத் தாங்கநின் றாரே.
  • 3. கானுறு கோடி கடிகமழ் சந்தனம்
    வானுறு மாமலர் இட்டு வணங்கினும்
    ஊனினை நீக்கி உணர்பவர்க் கல்லது
    தேனமர் பூங்கழல் சேரஒண் ணாதே.
  • 4. மேவிய ஞானத்தின் மிக்கிடின் மெய்ப்பரன்
    ஆவயின் ஞான நெறிநிற்றல் அற்சனை
    ஓவற உட்பூ சனைசெய்யில் உத்தமம்
    சேவடி சேரல் செயலறல் தானே.
  • 5. உச்சியுங் காலையு மாலையும் ஈசனை
    நச்சுமின் நச்சி `நம` என்று நாமத்தை
    விச்சுமின் விச்சி விரிசுடர் மூன்றினும்
    நச்சுமின் பேர்நந்தி நாயக னாகுமே.
  • 6. இந்துவும் பானுவுமி யங்குந் தலந்திடை
    வந்தித்த தெல்லாம் அசுரர்க்கு வாரியாம்
    இந்துவும் பானுவுமி யங்காத் தலத்திடை
    வந்தித்தல் நந்திக்கு மாபூசை யாமே.
  • 7. இந்துவும் பானுவு மென்றெழு கின்றதோர்
    விந்துவும் நாதமு மாகிமீ தானத்தே
    சிந்தனை சாக்கிரா தீதத்தே சென்றிட்டு
    நந்தியைப் பூசிக்க நற்பூசை யாமே.
  • 8. மனபவ னங்களை மூலத்தின் மாற்றி
    அநித உடல்பூத மாக்கி யகற்றிப்
    புனிதன் அருளினிற் புக்கிருந் தின்பத்
    தனிஉறு பூசை சதாசிவற் காமே.
  • 9. பகலு மிரவும் பயில்கின்ற பூசை
    இயல்புடை யீசற் கிணைமல ராகா
    பகலு மிரவும் பயிலாத பூசை
    சகலமுந் தான்கொள்வன் தாழ்சடை யோனே.