ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 12. குருபூசை

பதிகங்கள்

Photo

இராப்பக லற்ற இடத்தே யிருந்து
பராக்கற ஆனந்தத் தேறல் பருகி
இராப்பக லற்ற இறையடி யின்பத்(து)
இராப்பகல் மாயை இரண்டடித் தேனே.

English Meaning:
Where Neither Day Nor Night is, there No Maya is

Seated in the sphere where neither day nor night is
The supreme honeyed bliss I imbibed;
Lost in thought to events outside
At the holy Feet of the Lord
Where neither day nor night is,
I dispelled the Maya twain,
That with day and night compare.
Tamil Meaning:
இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் தோன்றாத ஆழ்ந்த தியான நிலையேயிருந்து, அதனால் விளைகின்ற சிவானந்தமாகி தேனை வேறுநினைவின்றிப் பருகினமையால், இரவும், பகலும் ஆகிய கால வேறுபாடுகள் இல்லாத இறைவனது திருவடியின்பத்தில் திளைத்து, மேற்கூறிய வேறுபாடுகளையுடைய காலமாகிய மாயா காரியம் இரண்டினையும் யான் போக்கிவிட்டேன்.
Special Remark:
``தேறல்`` என்றது `தேன் துளி` என்னும், பொருட்டாய்ச் சிவானந்தத்தை ஓரளவே சுவைத்ததையும், ``இன்பம்`` என்றது `இன்ப வெள்ளம்` என்னும் பொருட்டாய் அதில் மூழ்கித் திளைத்ததையும் குறித்தன. யோகாவத்தையில் தியானம் துரியமும், சமாதி துரியாதீதமும் ஆதலை விளக்குதற்கு இவ்வாறு அருளிச் செய்தார்.
இதனால், சிவ பூசையைத் தாம் நிரம்பச் செய்து பெற்ற அனுபவத்தை விளக்கி முடித்தவாறு.