ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. அருளில் தலைநின் றறிந்தழுந் தாதார்
    அருளில் தலைநில்லார் ஐம்பாசம் நீங்கார்
    அருளின் பெருமை அறியார் செறியார்
    அருளின் பிறந்திட்(டு) அறிந்தறி வாரே.
  • 2. வாரா வழிதந்த மாநந்தி பேர்நந்தி
    ஆரா அமுதளித் தானந்த பேர்நந்தி
    பேரா யிரம்உடைப் பெம்மான்பேர் ஒன்றினில்
    ஆரா அருட்கடல் ஆடுகென் றானே.
  • 3. ஆடியும் பாடியும் அழுதும் அரற்றியும்
    தேடியும் கண்டேன் சிவன்பெருந்தன்மையைக்
    கூடிய வாறே குறியாக் குறிதந்தென்
    ஊடுகின் றாள்அவன் தன்அருள் உற்றே.
  • 4. உற்ற பிறப்பும் உறுமல மானதும்
    பற்றிய மாயா படலம் எனப்பண்ணி
    `அற்றனை நீ`என் றடிவைத்தான் பேர்நந்தி
    கற்றன விட்டேன் கழல்பணிந் தேனே.
  • 5. விளக்கினை ஏற்றி வெளியை அறிமின்
    விளக்கினின் முன்னை வேதனை மாறும்
    விளக்கை விளக்கும் விளக்குடை யார்கள்
    விளக்கில் விளங்கும் விளக்காவர் தாமே.
  • 6. ஒளியும் இருளும் ஒருகாலும் தீரா
    ஒளியுளோர்க் கன்றோ ஒழியா தொளியும்
    ஒளியிருள் கண்டகண் போல்வே றாய்உள்
    ஒளியிருள் நீங்கி உயிர்சிவம் ஆமே.
  • 7. புறமே திரிந்தேனைப் பொற்கழல் சூட்டி
    நிறமே புகுந்தென்னை நின்மல னாக்கி
    அறமே புகுந்தெனக்(கு) ஆரமு தீந்த
    திறமேதென் றெண்ணித் திகைத்திருந் தேனே.
  • 8. அருளது என்ற அகலிடம் ஒன்றும்
    பொருளது என்ற புகலிடம் ஒன்றும்
    மருளது நீங்க மனம்புகுந் தானைத்
    தெருளுறும் பின்னைச் சிவகதி யாமே.
  • 9. கூறுமின் நீர்முன் பிறந்திங்(கு) இறந்தைமை
    வேறொரு தெய்வத்தின்மெய்ப்பொருள் நீக்கிடும்
    பாறணி யும்உடல் வீழவிட்(டு) ஆயுயிர்
    தேறணி யாம்இது செப்பவல் லீரே.