ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. வாசியும் மூசியும் பேசி வகையினால்
    பேசி யிருந்து பிதற்றிப் பயனில்லை
    ஆசையும் அன்பும் அறுமின் அறுத்தபின்
    ஈசன் இருந்த இடம்எளி தாகுமே.
  • 2. மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
    கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
    வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
    மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
  • 3. ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள்
    ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
    ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
    ஆசை விடவிட ஆனந்தம் ஆமே.
  • 4. அடுவன பூதங்கள் ஐந்தும் உடனே
    படுவழி செய்கின்ற பற்றற வீசி
    விடுவது வேட்கையை மெய்ந்நின்ற ஞானம்
    தொடுவது தம்மைத் தொடர்தலும் ஆமே.
  • 5. உவாக்கடல் ஒக்கின்ற ஊழியும் போன(து)
    உவாக்கட லுட்படுத் துஞ்சினர் வானோர்
    அவாக்கட லுட்பட்(டு) அழுந்தினர் மண்ணோர்
    தவாக்கடல் ஈசன் தரித்துநின் றானே.
  • 6. நின்ற வினையும் பிணியும் நெடுஞ்செயல்
    துன்றுந் தொழில்அற்றுச் சுத்தம் தாகலும்
    பின்றைங் கருமமும் பேர்த்தருள் நேர்பெற்றுத்
    துன்றி அழுந்தலும் ஞானிகள் தூய்மையே.
  • 7. உண்மை உணர்ந்துற ஒண்சித்தி முத்தி ஆம்
    பெண்மயல் கெட்டறப் பேறட்ட சித்தியாம்
    திண்மையின் ஞானி சிவகாயம் கைவிட்டால்
    அண்மை அருள்தான் அடைந்தன்பின் ஆறுமே.
  • 8. `அவன் இவன் ஈசன்` என்(று) அன்புற நாடிச்
    `சிவன் இவன் ஈசன் என்(று) உண்மையைஓரார்
    பவனிவன் பல்வகை யாம்இப் பிறவிப்
    புவன் இவன் போவது பொய்கண்ட போதே.
  • 9. கொதிக்கின்ற வாறும் குளிர்கின்ற வாறும்
    பதிக்கின்ற வாறிந்தப் பாரகம் முற்றும்
    விதிக்கின்ற ஐவரை வேண்டா துலகம்
    நொதிக்கின்ற காயத்துள் நூல்ஒன்றல் ஆமே.