
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 40. அவா அறுத்தல்
பதிகங்கள்

மாடத் துளான் அலன் மண்டபத் தான்அலன்
கூடத் துளான்அலன் கோயிலுள் ளான் அலன்
வேடத் துளான்அல்லன் வேட்கைவிட் டார்நெஞ்சில்
மூடத்து ளேநின்று முத்திதந் தானே.
English Meaning:
Lord is in the Desire—AbnegatedIn stony houses and stately halls, He is not;
In parlours deep and temples massive, He is not;
In holy garbs he is not;
In the thoughts of those,
Who have desires abnegated, is He,
Fleshy body, though therein be;
He, their liberation granted.
Tamil Meaning:
சிவன், ஆசையால் மூடப்பட்டுள்ள அந்த மனங் களிலே வெளிப்படாது மறைந்து நின்று, ஆசையற்றவர்களது மனங் களிலே வெளிப்பட்டு விளங்கி, அவர்கட்கு முத்தியைத் தருகின்றான். ஆகையால் அவன், அவனை வைத்து வழிபடுகின்ற மாடம், மண்டபம், கூடம், கோயில், திருவேடம் ஆகிய இவ்விடங்களில் இல்லை.Special Remark:
மாடம் - இல்லங்களில் சுவர்களில் அமைக்கப்படும் சிறு நிலைகள். அடியார் வேடமும் சிவன் உரையும் இடமாகக் கொள்ளப்படுதல் தெளிவு. `இவ்விடங்களில் சிவன் இல்லை` என்றது, ஆசையுற்ற மனங்களுடன் அவ்விடங்களில் அவனை வழிபடு வார்க்கு. `மூடு அத்துளே நின்று` எனப்பிரித்து, அதனை, வேட்கை விட்டார் நெஞ்சில் முத்தி தந்தான்` என்பதற்கு முன்னே கூட்டி முதற் கண் வைத்து உரைக்க. `அதனுள்` என்பது, `அத்துள்` என மருவிற்று. நின்று - மறைந்து நின்று. `மூடு அத்துளே மறைந்து நின்று` என்றதனால், மூடுதல் இன்றி விளங்கிய நெஞ்சில் வெளிப்பட்டு நிற்றல் பெறப் பட்டது. முன் மந்திரத்து நின்ற `ஈசன்` என்பதே இம்மந்திரத்திற்கு எழு வாயாய் வந்து இயைந்தது.இதனால், `உள்ளத்தில் ஆசை அறா தவர்கள் வெளியில் தனியிடங்களில் சிவனை வைத்து வழிபடுதலால் பயனில்லை, என்பது கூறப்பட்டது.Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage