ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. காலும் தலையும் அறியார் கலதிகள்
    கால்அந்தச் சத்தி அருள்என்பர் காரணம்
    பால்ஒன்று ஞானமே பண்பார் தலைஉயிர்
    கால்அந்த ஞானத்தைக் காட்டவீ டாகுமே.
  • 10. பெற்ற புதல்வர்பால் பேணிய நாற்றமும்
    குற்றமும் கண்டும் குணங்குறை செய்ப ஓர்
    பற்றைஅவ் வீசன் உயிரது பான்மைக்குச்
    செற்ற மிலாச் செய்கைச் செய்தின செய்யுமே.
  • 2. தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
    தலைஅடி உச்சி உள்ளது மூலம்
    தலைஅடி யான அறிவை அறிந்தோர்
    தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.
  • 3. நின்றான் நிலமுழு(து) அண்டமும் மேல்உற
    வன்றாள் அசுரர் அமரரும் உய்ந்திடப்
    பின்றான் உலகம் படைத்தவன் பேர்நந்தி
    தன்றா ளிணைஎன் தலைமிசை யானதே.
  • 4. சிந்தையி னுள்ளுள(து) எந்தை திருவடி
    சிந்தையும் எந்தை திருவடிக் கீழது
    எந்தையும் என்னை அறியகி லா னாயின்
    எந்தையை யானும் அறியகி லேனே.
  • 5. பன்னாத பார் ஒளிக் கப்புறத்தப்பால்
    என்னா யகனார் இசைந்தங் கிரிந்திடம்
    உன்னா ஒளியும் உரை செயா மந்திரஞ்
    சொன்னான் கழலிணை சூடிநின் றேனே.
  • 6. பதியது தோற்றும் பதமது வைம்மின்
    மதியது செய்து மலர்ப்பதம் ஓதும்
    நதிபொதி யுஞ்சடை நாரியோர் பாகன்
    கதிசெயும் காலங்கள் கண்டுகொ ளீரே.
  • 7. தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
    தரித்துநின் றான்அம ராபதி நாதன்
    கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
    பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.
  • 8. ஒன்றுண்டு தாமரை ஒண்மலர் மூன்றுள
    கன்றாத தாளும் இரண்டுள காயத்துள்
    நன்றாகக் காய்ச்சிப் பதம்செய வல்லார்கட்(கு)
    இன்றேசென் றீசனை எய்தலும் ஆமே.
  • 9. கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
    மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
    பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
    மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.