ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்

பதிகங்கள்

Photo

கால்கொண்டென் சென்னியிற் கட்டறக் கட்டற
மால்கொண்ட நெஞ்சின் மயக்கில் துயக்கறப்
பால்கொண்ட என்னைப் பரன்கொள நாடினான்
மேல்கொண்டென் செம்மை விளம்பஒண்ணாதே.

English Meaning:
Grace Leads to Holy State

Firm He planted His Feet on my head;
My fetters into fragments broke;
My heart`s impurities were entire cleansed;
Milky-white pure it became;
The Lord then sought
To take me into His Fold;
What more can I say
Of my Holy State?
Tamil Meaning:
சிவபெருமான் பக்குவம் எய்திய என்னைத் தனது திருவடியாகிய மலர்கள் எனது தலையிலே எனது பாசக்கட்டு நீங்குமாறு மலரும்படி செய்யும் முகத்தால், மயக்கம் கொண்ட எனது மனத்தால் திகைத்து நிற்கின்ற திகைப்பை நீக்கி ஆட்கொள்ள நினைத்தான். அதனால் நான் கோணங்கள் எல்லாம் நீங்கி, நேர்மையை அடைந்தேன் அந்த நேர்மை இது` எனச் சொல்லவாராது.
Special Remark:
`கால்கொண்டு` என்பது, இறுதியில் நின்ற ``கட்டற`` என்பதனோடு இயைந்தது. அந்த `கட்டற` என்றது, `முறுக்கவிழ்ந்து மலர` என்றதாம். ``கால்கொண்டு கட்டற`` என்றாரேனும், `கால் கட்டறலைக் கொண்டு` என்றலே கருத்து. `பரன், பால் கொண்ட என்னைக் கால் கட்டறல்கொண்டு துயக்கறக் கொள்ள நாடினான்` என இயைக்க. பால் - பான்மை` பக்குவம் மேல் - அதன்பின் மேல் கொண்ட` என்பதில் அகரம் தொகுத்தலாயிற்று. கோணங்கள் ஆணவ மலத்தால் எழும் செருக்கும், கன்ம மலத்தால் வரும் இன்பத் துன்பங்களும், மாயா மலத்தால் வரும் ஐம்புலத் தாக்குதலும் பிறவுமாம். நேர்மை, மெய்யுணர்வு, முதல்வனது இயல்பு பற்றி எழும் அன்பு, அதனால் விளையும் ஆனந்தம் முதலியனவாம்.
`பக்குவம் வந்தால் நீவிரும் இவையெல்லாம் பெறுவீர்` என்பது குறிப்பெச்சம்.
இதனால், `திருவடிப் பேறே கோட்டம் நீக்கிச் செம்மை செய்வது` என்பது கூறப்பட்டது.