ஓம் நமசிவாய

எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்

பதிகங்கள்

Photo

தலைஅடி யாவ தறியார்கா யத்தில்
தலைஅடி உச்சி உள்ளது மூலம்
தலைஅடி யான அறிவை அறிந்தோர்
தலைஅடி யாகவே தாம்இருந் தாரே.

English Meaning:
Head and Feet Are Within

They know not
The Hand and Foot (of Lord) is within body,
The Head is in Sahasrara (Cranium)
The Foot in Muladhara;
Those who visioned thus in the Yogic way,
Remained in Prayer
Their heads bowed at Lord`s feet.
Tamil Meaning:
(முன் மந்திரத்தில், ``காலந்த ஞானத்தைக் காட்ட வீடாகுமே`` என்ற சிவஞானமாகிய பதி ஞானமாம்) உடம்பில் `தலை, கால்` என்பன. வெளியுறுப்பாய் இருத்தல் யாவரும் அறிந்தது. ஆயினும் உடம்பிற்கு உள்ளே தலை கால்கள் உள்ளன; அவற்றைப் பலர் அறியார். அந்த `தலை, கால்` என்பன முறையே தலை உச்சியும், மூலாதாரமும் ஆகும். (தலை உச்சி `ஏழாம்தானம் எனப்படும்) அந்தத் தலையில் எல்லாருக்கும் இயல்பாக உண்டாகின்ற அறிவு உலகியல் அறிவாகும். அந்த அறிவு, மூலாதாரத்தில் உள்ள குண்டலி கீழ் மேலாகச் சுழன்று செய்யும் செயலால் யோகக்காட்சி அறிவாய் மாறி நிகழப்பெற்றவர், அந்த அறிவையே உடையராய் இருத்தலன்றி, உலகியல் அறிவை உடையவர் ஆகார்.
Special Remark:
`தலையும், அடியும் முறையே உச்சியில் உள்ளது. மூலத்தில் உள்ளது` என நிரல்நிறையாக வைத்து உரைக்க. ``உள்ளது`` என்பது, ``மூலம்`` என்பதன் பின்னரும் சென்று இயையும். தலை அடியான அறிவு - தலை அறிவு அடி அறிவாக மாறிய அறிவு. `தலை அடியாகவே இருந்தார்` என்க.
இதனால், `அடி தலை யறிதல்` என்னும் வழக்குச் சிவஞான நிகழ்ச்சியைக் குறித்தலேயன்றி யோக ஞான நிகழ்ச்சியையும் குறிக்கும் என்பது கூறப்பட்டது.