
ஓம் நமசிவாய
எட்டாம் தந்திரம் - 17. அடிதலை அறியும் திறங்கூறல்
பதிகங்கள்

தரித்துநின் றான் அடி தன்னுடை நெஞ்சில்
தரித்துநின் றான்அம ராபதி நாதன்
கரித்துநின் றான்கரு தாதவர் சிந்தை
பரித்துநின் றான்அப் பரிபாகத் தானே.
English Meaning:
Grace is Granted According to Degree of DevotionIn the thoughts of those
Who hold Him steadfast,
Firm He stood, His Feet planted;
—He the Lord of Celestials;
Those who thought not of Him,
He shunned;
To each according to his devotion
He His Grace grants.
Tamil Meaning:
எல்லாப்பொருள் கட்கும் ஆதாரமாய் அவை -களைத் தாங்கிநிற்பவனாகிய சிவன் தன்னை எண்ணாதவர்களது உள்ளத்தை வெறுத்தும், அடைதற்கரிய அப்பரிபாகத்தை அடைந் தமை காரணமாக பரிபாகிகளது உள்ளத்தை விரும்பியும் நிற்கின்றான். ஆகவே, அவனது திருவடியைத் தனது உள்ளத்தில் தாங்கி நிற்பவன் இவ்வுலகத்திருப்பினும் சிவலோகத்தில் இருப்பவனேயாவான்.Special Remark:
`தரித்து நின்றான், கருதாதவர் சிந்தை கரித்து நின்றான்; அப்பரிபாகத்தானே பரித்துநின்றான்; அவன் அடி தன்னுடை நெஞ்சில் தரித்து நின்றான் அமராபதிநாதன்` என இயைத்துப் பொருள்கொள்க; ``பரித்து`` என்பதை, `பரிப்ப` எனத்திரிக்க. ``சிந்தை`` என்பது பரித்த லோடும் இயையும். அகரச்சுட்டு அடைதற்கு அருமை தோன்றி நின்றது. `அவன் அடி` எனச் சுட்டியுரைக்க. கரித்தல் - வெறுத்தல். `கருதாமைக்குக் காரணம் பரிபாகம் இன்மை` என்பது தோன்றுதல் அறிக. `அமரர்` என்பது தேவரையும், `அமராபதி` என்பது தேவ ருலகத்தையும் குறித்தல் பொது வழக்காயினும், சிவநெறி வழக்கில் அவை சிவ சாலோக சாமீப சாரூப நிலைகளை அடைந்தவர்களையும், சிவலோகத்தையும் குறிக்கும்.இதனால், சிவனது திருவடிப்பேற்றின் அருமையும், அப்பேறு பெற்றவர்களது சிறப்பும் கூறப்பட்டன.
Listen to all Thirumandhiram Songs with Lyrics
Medicinal Usage