ஓம் நமசிவாய

The Next Song will be automatically played at the end of each song.

Padhigam

Paadal

  • 1. உள்ளத் தொருவனை உள்ளுறு சோதியை
    உள்ளம்விட் டோரடி நீங்கா ஒருவனை
    உள்ளமுந் தானும் உடனே இருக்கினும்
    உள்ளம் அவனை உருவறி யாதே. 
  • 2. இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
    துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
    என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
    முன்பிற் கொளுவி முடிகுவ தாமே. 
  • 3. இறையவன் மாதவன் இன்பம் படைத்த
    மறையவன் மூவரும் வந்துடன் கூடி
    இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
    மறையவன் வைத்த பரிசறி யாரே. 
  • 4. காண்கின்ற கண்ணொளி காதல்செய் தீசனை
    ஆண்பெண் அலியுரு வாய்நின்ற ஆதியை
    ஊண்படு நாவுடை நெஞ்சம் உணர்ந்திட்டுச்
    சேண்படு பொய்கை செயலணை யாரே. 
  • 5. தெருளும் உலகிற்குந் தேவர்க்கும் இன்பம்
    அருளும் வகைசெய்யும் ஆதிப் பிரானும்
    சுருளுஞ் சுடருறு தூவெண் சுடரும்
    இருளும் அறநின் றிருட்டறை யாமே. 
  • 6. அரைக்கின் றருள்தரும் அங்கங்கள் ஓசை
    உரைக்கின்ற ஆசையும் ஒன்றொடொன் றொவ்வாப்
    பரக்கும் உருவமும் பாரகந் தானாய்க்
    கரக்கின் றவைசெய்த காண்டகை யானே.
  • 7. ஒளித்துவைத் தேனுள் ளுறவுணர்ந் தீசனை
    வெளிப்பட்டு நின்றருள் செய்திடு மீண்டே
    களிப்பொடுங் காதன்மை என்னும் பெருமை
    வெளிப்பட்டிறைஞ்சின்நும் வேட்சியுமாமே.
  • 8. ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
    இருங்கரை மேலிருந் தின்புற நாடி
    வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
    அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 
  • 9. மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
    உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
    கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
    அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே.