ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

பதிகங்கள்

Photo

இறையவன் மாதவன் இன்பம் படைத்த
மறையவன் மூவரும் வந்துடன் கூடி
இறையவன் செய்த இரும்பொறி யாக்கை
மறையவன் வைத்த பரிசறி யாரே. 

English Meaning:
With Hara, Hari and Brahma assembling
The Primal Lord fashioned this body,
The subtle organs of sense built-in;
We know not the treasure
He has enshrined here.
Tamil Meaning:
`உருத்திரன், மால், அயன்` என்னும் காரணக் கடவுளர்தாமும், மேல் உள்ள சீகண்ட உருத்திரரால் தமக்குத் தரப்பட்ட சிறந்த இயந்திரமாகிய உடம்புகள் கிடைக்கப் பெற்றுப் பொருந்தி நின்று உள்ளத்துள் ஒளிந்து நிற்கும் கள்வனாகிய சிவன் தம்மாட்டு வைத்த மறைப்பினை அறிய மாட்டார்கள்.
Special Remark:
``இன்பம்`` என்றது ஆகுபெயராய் மேற்குறித்த பிறவியை உணர்த்திற்று. ``மூவரும்`` என்ற உம்மை சிறப்பு; முற்றன்று. `யாக்கை வந்து உடன் கூடி` என முன்னே கூட்டுக. ``இறையவன்`` என்பது உருத்திரன் மேலதாய், முன்னர்க் குணி ருத்திரனையும், பின்னர்ச் சீகண்டவுருத்திரரையும் குறித்தது. ``மறையவன்`` இரண்டில் பின்னது, `கள்வன்` என்னும் பொருட்டு. `மறைப்பறியாரே` என ஓதுதல் சிறக்கும்.
இதனால், மும்மூர்த்திகளும் திரோபவத்துட் பட்டவராதல் கூறப்பட்டது.