ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

பதிகங்கள்

Photo

ஒருங்கிய பாசத்துள் உத்தம சித்தன்
இருங்கரை மேலிருந் தின்புற நாடி
வருங்கரை ஓரா வகையினிற் கங்கை
அருங்கரை பேணில் அழுக்கது வாமே. 

English Meaning:
The Sadasiva that stood as one
Animated Mahesvara;
And then Hara, Hari, and Brahma
Thus did the One become the familial five.
Tamil Meaning:
கடலில் அகப்பட்டவன் அதன் கரையை அடைந்து இன்புறவேண்டி நீந்தும்பொழுது அக்கரை அருகில் வருவதை அறியாதிருத்தல் போலவும், கங்கைக்கரையில் நிற்பவன் அதனுள் மூழ்காமல் கரையிலே நிற்றல்போலவும் மேலான சித்தாகிய ஆன்மா, கீழான மலத்துள் நின்று மாசும் துன்பமும் உடையதாகின்றது.
Special Remark:
இரண்டாம் அடி முதலாகத் தொடங்கி, `உத்தம சித்தன் பாசத்துள் அழுக்கதுவாம்` எனக் கூட்டி முடிக்க. சித்தாகிய உயிரை, `சித்தன்` என ஆண்பாலாக ஓதியது வடமொழி முறை. ``வருங் கரை`` என்றது, கடற் கரையை என்பது ஆற்றலால் விளங்கிற்று. பேண், முதனிலைத் தொழிற்பெயர். இல் இரண்டும் ஒப்புப் பொருளில் வந்த உருபுகள். ``அழுக்கு`` என்றது, துன்பம், மாசு இரண்டிற்கும் ஒப்பக் கூறியது. துன்பம் நீங்காமைக்கும், மாசு நீங்காமைக்குமாக வேறு வேறான இரண்டு உவமைகள் கூறினார். `நாடி` என்றது பெயர்.
இதனால், பரிபாகம் இல்லாத உயிர் மறைத்தலுட் படுமாறு கூறப்பட்டது.
இதனால், மலபரிபாகம் இல்லாத உயிர்கள் மறைத்தல் தொழிலுட்படுதல் கூறப்பட்டது.