ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

பதிகங்கள்

Photo

மண்ணொன்று தான்பல நற்கல மாயிடும்
உண்ணின்ற யோனிகட் கெல்லாம் ஒருவனே
கண்ணொன்று தான்பல காணுந் தனைக்காணா
அண்ணலும் இவ்வண்ண மாகிநின்றானே. 

English Meaning:
He is the Pure One
The Siddha in whom Pasa lies prostrate;
Be firmly seated on land here below
And Seek Him in ways felicitous—
That you may vision the Land Beyond;
Not doing this,
You are like one
Who is seated on the banks of Ganga,
Yet remains unwashed and impure.
Tamil Meaning:
மண் ஓன்றே கலங்கள் (பாத்திரங்கள்) பலவற்றிலும் பொருந்தி நிற்கின்றது. அதுபோலச் சிவபெருமான் ஒருவனே உயிர் கள் அனைத்தினுள்ளும் நிற்பான். ஆயினும், கண் பிற பொருளைக் காணுமாயினும், தன்னையும், தன்னொடு பொருந்தியுள்ள உயிரையும் காணாததுபோல, உயிர்கள் பிறவற்றை அறியுமாயினும், தம்மையும், தம்மோடு உடனாய் நிற்கின்ற சிவனையும் அறிதல் இல்லை.
Special Remark:
முதற்காரண நிமித்த காரணமாய வேறுபாடு உண்டா யினும், ஒன்று பலவற்றுள் நிற்றல் மாத்திரைக்கு மண்ணை உவமை கூறினார். பொருளால் உவமத்துள் கண் உயிரைக் காணாமையும், உவமத்தால் பொருட்கண் தம்மைக் காணாமையும் கொள்ள வைத்தார். ``இவ்வண்ணம்`` என்றது;` உயிர் கண்ணினது காட்சிக்கு அகப்படாது நிற்றல் போல` என்றவாறு. உயிர் காணாமையை இறைவன் மேல் வைத்து ஓதினார், இங்குக் கூறுகின்றது அவன் தொழிலாதல்பற்றி. இத்திருமந்திரப் பொருளே பற்றி மெய்கண்டதேவர்,
காட்டிய கண்ணே தனைக்காணா; கண்ணுக்குக்
காட்டிய உள்ளத்தைக் கண்காணா - காட்டிய
உள்ளம் தனைக்காணா; உள்ளத்தின் கண்ணாய
கள்வன்றான் உள்ளத்தின் கண். .
- சிவஞானபோதம் - சூ 9, அதி 1.
என ஓதினமை காண்க.
இதனால், மறைத்தல் தொழில் நிகழுமாற்றிற்கு உவமை கூறப் பட்டது.