ஓம் நமசிவாய

இரண்டாம் தந்திரம் - 12. திரோபவம்

பதிகங்கள்

Photo

இன்பப் பிறவி படைத்த இறைவனுந்
துன்பஞ்செய் பாசத் துயருள் அடைத்தனன்
என்பிற் கொழுவி இசைந்துறு தோல்தசை
முன்பிற் கொளுவி முடிகுவ தாமே. 

English Meaning:
The Lord who gave life so sweet
Imprisoned me in pasa`s miseries;
A skeletal frame He fashioned,
With flesh and skin He clothed it;
Lighting then the spark of life
To annihilation He hastened me.
Tamil Meaning:
பின்னர் இன்பத்தைப் பெறுதற்குக் கருவியாம் பிறப்பை உயிர்கட்குக் கொடுத்த சிவன், அப்பிறப்பினுள் நிற்கும் பொழுது துன்பமயமான வினையால் விளையும் துயருள் அழுந்தவே வைத்துள்ளான். பிறவியால் வரும் மாசுடம்புகள் முன்னே சில காலம் துன்பத்தைத் தந்து, பின்பு ஓழிவனவாகும்.
Special Remark:
இன்பப் பிறவி - இன்பத்திற்கு ஏதுவாம் பிறவி; இஃதுஇயைபின்மை நீக்கிய விசேடணம். உடம்பு துன்பமாகாது துன்பம் வெளிப்படுதற்கு வாயிலேயாக வினையே துன்பம் தருவது ஆகலின், ``துன்பஞ்செய் பாசம்`` என்றது வினையையேயாம். வினை இன்பமும் செய்வதாயினும், முன்னும் பின்னும் துன்பத்தோடே தொடர்புற்று நிற்றலின், துன்பம் செய்வதாகவே கூறினார். என்பு முதலியவற்றாலான உடம்பையே பெரும்பான்மையும், `உடம்பு` என வழங்குப ஆகலான். அவற்றையே எடுத்தோதினார். `கொழுவி இசைந்துறு தோல் தை\\\\u2970?` என்றது, அவ்வாறியன்ற உடம்பின்மேல் நின்றது. முன்பு - ஆணவமலம் நீங்குதற்கு முன்பு, ``முன்பில் கொளுவி`` என்பதில் கொளுவுதற்கு, `துன்பம்` என்னும் செயப்படு பொருள் வருவிக்க.
இதனால், திரோபவமும், அறுத்தும், சுட்டும் சிலநோயைத் தீர்க்கின்ற மருத்துவன் செய்கைபோல அருளே (மறக்கருணை) யாதல் கூறப்பட்டது.